NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
    ஆலோசனைகளில் ஈடுபட்ட ஜான் ஃபைனர் மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர்.

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்

    எழுதியவர் Srinath r
    Dec 05, 2023
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,

    இருநாட்டு உறவுகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்ய முயற்சித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், உள்ளிட்டவற்றை குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி உடன் அமெரிக்கா- இந்தியாவின் முயற்சியான கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜி (iCET) திட்டத்தை மதிப்பாய்வு செய்ய, முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா வந்தனர்.

    பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பால் விவரிக்கப்படும், இந்தியா-அமெரிக்க உறவில், iCET திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    2nd card

    மத்திய கிழக்கு, காசா பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோருடன், இருநாடு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக ஃபைனர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,

    இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கொள்கை சீரமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் ஆழமான விவாதங்கள் நடைபெற்றதாக, வெள்ளை மாளிகை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு தொடர்பான பிரச்சனைகள், செங்கடலில் சமீபத்தில் தாக்கப்பட்ட வர்த்தக கப்பல்கள், வர்த்தக கப்பல்களின் சுதந்திரமான பயணங்களுக்கு வழிவகுப்பது, போருக்கு பின் காசா எவ்வாறு இருக்க வேண்டும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    3rd xrad

    இந்தியா அமைத்த விசாரணைக் குழுவை வரவேற்ற அமெரிக்கா

    "அமெரிக்காவில் கொடிய சதித்திட்டத்தை விசாரிப்பதற்காக இந்தியா ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததை ஃபைனர் வரவேற்றார்" என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க-கனடா குடிமகனான காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய, இந்திய அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் சதித் திட்டம் தீட்டியதாக, அமெரிக்கா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது.

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, இந்தியா ஒரு உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைந்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அதை அமெரிக்கா திங்கட்கிழமை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    அமெரிக்க அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெய்சங்கர்

    Good to meet Principal Deputy NSA of the US Jon Finer this afternoon.

    Useful exchange of views on the global situation. Discussed taking our bilateral cooperation forward. pic.twitter.com/WBwVCPpzF5

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜோ பைடன்
    குடியரசு தலைவர்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை குடியரசு தலைவர்
    சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை சீனா
    ஜார்ஜ் ஃப்லாய்ட்டை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார் சிறை

    ஜோ பைடன்

    அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெவின் மெக்கார்த்தி  அமெரிக்கா
    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? இஸ்ரேல்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா

    குடியரசு தலைவர்

    சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம் சீனா
    ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா சபை
    போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு ஹமாஸ்
    அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் ஜோ பைடன்

    இந்தியா

    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் அமெரிக்கா
    இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான முன்னோட்டம் ஆஸ்திரேலியா
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்  பெங்களூர்
    இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025