NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?
    அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 25, 2025
    07:51 am

    செய்தி முன்னோட்டம்

    வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.

    இந்தத் தாக்குதல் "நாட்டின் சூழலைக் கெடுக்க" நடத்தப்பட்டதாக அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்தது.

    கூட்டத்தின் முடிவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் மத்திய அரசிற்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு,"அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறின" என்றார்.

    எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கட்சித்தலைவர்களுக்குத் தெரிவித்தனர்.

    நடவடிக்கை

    பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அறைகூவல் விடுத்த எதிர்க்கட்சிகள்

    பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் உட்பட சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகளை எழுப்பின.

    கூட்டத்தின் போது "பாதுகாப்பு குறைபாடு" ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவை வழங்கியதாகவும் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,"கூட்டத்தில் இருந்த அனைவரும் பயங்கரவாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்து, அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினர்" என்றார்.

    எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை நேரடியாகக் கேட்க பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டார்.

    பாதுகாப்பு குறைபாடு

    பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட மத்திய அரசு

    கூட்டத்தின் போது, ​​பல எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு நெறிமுறைகள் தோல்வியடைந்தது குறித்து கேள்விகளைக் கேட்டன.

    "பாதுகாப்புப் படைகள் எங்கே இருந்தன? மத்திய ரிசர்வ் போலீஸ் படை எங்கே இருந்தது?" என்று பல தலைவர்கள் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, பைசரன் பகுதியைத் திறப்பதற்கு முன்பு உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசாங்கம் கூறியதாகக் கூறப்படுகிறது.

    நடைமுறைப்படி, இந்த பகுதி ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

    சம்பவத்திற்கு ராணுவத்தின் தாமதமான பதில் நடவடிக்கை குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.

    அந்த இடம் 45-நிமிட நடைப்பயணம் செய்தே அடையமுடியும் என்றும், அத்தகைய அவசரநிலைகளை விரைவாகக் கையாள எந்த நிலையான இயக்க நடைமுறையும்(SOP) இல்லை என்றும் அரசு அதிகாரிகள் விளக்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    பயங்கரவாதம்
    ஜம்மு காஷ்மீர்
    பஹல்காம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    மத்திய அரசு

    ₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்கிறது மத்திய அரசு தமிழ்நாடு
    சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு சந்திரயான்
    நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் இந்தியா
    தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை எக்ஸ்

    பயங்கரவாதம்

    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீர்
    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம் தேர்தல் முடிவு
    தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை தேர்தல் முடிவு
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம் தேர்தல் முடிவு

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு கிரிக்கெட் செய்திகள்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025