NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்
    அது "அமெரிக்காவின் வேலை இல்லை" என்று வலியுறுத்தினார் ஜே.டி. வான்ஸ்

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    05:40 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    அது "அமெரிக்காவின் வேலை இல்லை" என்று வலியுறுத்தினார்.

    ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஜே.டி. வான்ஸ், "இரு நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பதட்டத்தைக் குறைக்க ஊக்குவிக்க முயற்சிப்பதுதான் நாம் செய்யக்கூடியது. ஆனால் அடிப்படையில் எங்களுக்குப் பொருந்தாத, அமெரிக்காவின் கட்டுப்படுத்தும் திறனுடன் எந்த தொடர்பும் இல்லாத போரின் நடுவில் நாங்கள் ஈடுபடப் போவதில்லை" என்று கூறினார்.

    எதிர்பார்ப்பு

    பரந்த போராக மாற கூடாது என எதிர்பார்ப்பதாக JD வான்ஸ் தெரிவித்தார்

    "அமெரிக்கா இந்தியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து இராஜதந்திர வழிகளில் தொடரப் போகிறோம்," என்று வான்ஸ் கூறினார்.

    "இது ஒரு பரந்த பிராந்தியப் போராகவோ அல்லது ஒரு அணுசக்தி மோதலாகவோ மாறப் போவதில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இப்போது, ​​அது நடக்கப் போவதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று வான்ஸ் மேலும் கூறினார்.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னால் ஏதாவது உதவி செய்ய முடிந்தால், "நான் அங்கே இருப்பேன்" என்றும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் "நிறுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    பதட்டம்

    நேற்றிரவு ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாவட்டங்களில் பாகிஸ்தான் தாக்குதல்

    வியாழக்கிழமை பாகிஸ்தான், பொதுமக்கள் மற்றும் இராணுவப் பகுதிகளை குறிவைத்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் தீவிர பீரங்கித் தாக்குதல்கள் மூலம் தாக்குதலை நடத்தி பதட்டத்தை அதிகரித்தது.

    மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்தது.

    அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில், இந்தியா ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பையும் (AWACS) வீழ்த்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    இந்தியா

    இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை உலக வங்கி
    பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா ரஷ்யா
    இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல் பாகிஸ்தான்

    அமெரிக்கா

    இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டும் சீனா; 'இந்திய நண்பர்களுக்கு' 85,000 விசாக்கள் வழங்கியது சீனா
    தொடரும் வரி போர்: சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 245% வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்க விசாக்களுக்கான புதிய பயோமெட்ரிக் விதி: இந்தியர்களை எவ்வாறு பாதிக்கிறது விசா
    200 தெலுங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம் ஃபேன்னி மே; ஷாக் பின்னணி பணி நீக்கம்

    பாகிஸ்தான்

    மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மே 7 ஆம் தேதி பாதுகாப்பு பயிற்சி ஆலோசனை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவு உள்துறை
    நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன? போர்
    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை ஐநா சபை
    கையிருப்பில் பணம், டார்ச், மருந்துகள்: நாளைய பாதுகாப்பு பயிற்சியில் என்ன அறிவுறுத்தப்படும்? இந்தியா

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025