NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 
    நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்

    "ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 25, 2024
    08:14 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் அன்று, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது ​​நாட்டை ஒன்றிணைக்க புதிய தலைமுறைக்கு வழிவிடுவதாகவும், 'ஜோதியை அனுப்புவதாகவும்' கூறினார். மேலும் மறுதேர்தலிலிருந்து தான் விலகுவது என்ற முடிவு இதற்கான எடுக்கப்பட்டது என்பதையும் விளக்கினார்.

    அதோடு, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் வலியுறுத்தினார்.

    இருப்பினும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று அவர் டொனால்ட் டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை.

    தலைமை 

    ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் என பைடன் அழைப்பு 

    "நான் இந்த பதவியை மதிக்கிறேன், ஆனால் நான் என் நாட்டை அதிகம் நேசிக்கிறேன். உங்கள் ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதில், எந்த பட்டத்தையும் விட இது முக்கியமானது," என்று அவர் கூறினார்.

    பைடன் மேலும், "அமெரிக்க ஜனநாயகத்தினை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும்...இந்த முக்கியமான முயற்சியில் எனது கட்சியை நான் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனக்கு தெளிவாகிவிட்டது."

    "ஜனாதிபதியாக எனது சாதனை, உலகில் எனது தலைமை, மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான எனது பார்வை அனைத்தும் இரண்டாவது பதவிக்காலத்திற்கு தகுதியானது. ஆனால் எதுவும், எதுவும் நமது ஜனநாயகத்தை காப்பாற்றும் வழியில் வர முடியாது"என்று அவர் தெரிவித்தார்.

    வெளியேற்றம் 

    சொந்த கட்சியினரின் அழுத்தம் காரணமாக வெளியேறினார் பைடன்

    ஜூலை 21 அன்று, பைடன், ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்தார் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தனது வாரிசாக ஆமோதித்தார்.

    முன்னதாக சக ஜனாதிபதி வேட்பாளரான ட்ரம்பிற்கு எதிரான அவரது மோசமான விவாதத்திற்குப் பிறகு அவரது தேர்தல் வாய்ப்புகளில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட பலரும் அவரது உடற்தகுதி குறித்த கவலைகளை எழுப்பி, அவரது வெளியேற்றத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.

    கமலா ஹாரிஸ் 

    டிரம்பை எதிர் கொள்ளும் திறன் மிகுந்தவர் ஹாரிஸ் என பாராட்டினார் பைடன் 

    அதிபர் பைடன், கமலா ஹாரிஸ் "கடினமானவர்" என்றும், வரவிருக்கும் நவம்பர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ளும் "திறன் கொண்டவர்" என்றும் பாராட்டினார்.

    "அவர் அனுபவம் வாய்ந்தவர், கடினமானவர், திறமையானவர். அவர் எனது அலுவலக பணிகளை திறம்பட நிறைவேற்ற உதவியவர். நம் நாட்டிற்கு ஒரு தலைவராகவும் இருந்தார். இப்போது தேர்வு செய்வது அமெரிக்க மக்களே" என்று கூறினார்.

    "பொது வாழ்க்கையில் நீண்ட அனுபவத்திற்கு ஒரு நேரமும் இடமும் உள்ளது. அதே நேரத்தில், புதிய குரல்களுக்கு ஒரு நேரமும் இடமும் உள்ளது" என்று அவர் விளக்கினார்.

    நம்பிக்கைக்கும் வெறுப்புக்கும் இடையே அமெரிக்கா தேர்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். "நாம் நமது குடியரசை வைத்திருப்பது அமெரிக்கர்களின் கைகளில் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜோ பைடன்
    அமெரிக்கா
    கமலா ஹாரிஸ்
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜோ பைடன்

    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் அமெரிக்கா
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை அமெரிக்கா

    அமெரிக்கா

    வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி டொனால்ட் டிரம்ப்
    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை உலகம்
    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை இங்கிலாந்து
    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்  பாகிஸ்தான்

    கமலா ஹாரிஸ்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு ஜோ பைடன்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம் தமிழ்நாடு

    டொனால்ட் டிரம்ப்

    காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அமெரிக்கா
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது அமெரிக்கா
    அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப் அமெரிக்கா
    அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025