குடியேறுபவர்களுக்காக டிரம்ப் பரிந்துரைக்கும் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'கோல்ட் கார்டு' என்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றாக, 5 மில்லியன் டாலர்களுக்கு குடியுரிமை பெறும் வழியுடன் கூடிய "கோல்ட் கார்டு" விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.
கோல்ட் கார்டு என்பது- க்ரீன் கார்டு அல்லது நிரந்தர சட்டப்பூர்வ வதிவிட உரிமம் ஆகும்.
"அவர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள், அவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள், அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள், நிறைய வரிகளை செலுத்துவார்கள், நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள். எனவே இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கூறினார்.
வழிமுறை
புதிய கோல்ட் கார்டு விவரங்கள்
டிரம்ப் பரிந்துரைக்கும் 'கோல்ட் கார்டு' இரண்டு வாரங்களில் EB-5 விசாக்களை மாற்றும் என்று வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டை உருவாக்குவதற்காக 1990 ஆம் ஆண்டு காங்கிரஸால் EB-5கள் உருவாக்கப்பட்டன.
மேலும் குறைந்தது 10 பேரை வேலைக்கு அமர்த்தும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிப்பவர்களுக்கு இவ்வகை விசா தரப்படும்.
கோல்ட் கார்டு திட்டம், முதலீட்டாளர்களுக்கான சேர்க்கை விலையை உயர்த்தும், மற்ற கிரீன் கார்டுகளைப் போலவே, இது குடியுரிமைக்கான பாதையை உள்ளடக்கும்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மிகச் சமீபத்திய குடியேற்ற புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 30, 2022 ஆடு வரை மட்டுமே சுமார் 8,000 பேர் முதலீட்டாளர் விசாக்களைப் பெற்றுள்ளனர்.
கோல்ட் விசா
உலக நாடுகள் பலவும் கடைபிடிக்கும் நடைமுறை
முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக விசாக்கள் உலகம் முழுவதும் பொதுவானவை.
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பணக்காரர்களுக்கு 'கோல்ட் விசாக்களை' வழங்குவதாக ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் கூறுகிறது.
"இது ஓரளவுக்கு ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் உயர் மட்ட நுட்பத்தில், இது மக்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான ஒரு பாதையாகும். அடிப்படையில், செல்வந்தர்கள் அல்லது சிறந்த திறமைசாலிகள், அதாவது மக்கள் நுழைவதற்கும், நாட்டில் நீண்ட கால அந்தஸ்தைப் பெறுவதற்கும் நிறுவனங்கள் பணம் செலுத்தும்," என்று அவர் கூறினார்.
குடியுரிமைக்கான தகுதிகளை காங்கிரஸ் தீர்மானிக்கிறது, ஆனால் "தங்க அட்டைகளுக்கு" காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை என்று டிரம்ப் கூறினார்.