NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
    அதிபர் வேட்பளராக கமலா ஹாரிஸிற்கு தனது ஆதரவை வழங்கினார் பைடன்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 22, 2024
    07:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    இந்தியா நேரப்படி நேற்று, (ஜூலை 21) இரவு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பைடன் தனது ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

    அவர் தனது துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கு நன்றி தெரிவித்தார், அவரை "அசாதாரண கூட்டாளி" என்று குறிப்பிட்டு, அவரை தனது கட்சியின் வேட்பாளராக ஆமோதித்தார்.

    இந்த சூழலில் அப்படி ஒருவேளை கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் அதிபராக வெற்றிபெற்றால், அமெரிக்க அரசியல் வரலாற்றில், நாட்டினை வழிநடத்தும் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஆவார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜோ பைடனின் அறிக்கை

    pic.twitter.com/RMIRvlSOYw

    — Joe Biden (@JoeBiden) July 21, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

    And if you’re with us, donate to her campaign here:https://t.co/A0T3v7ItQm

    — Joe Biden (@JoeBiden) July 21, 2024

    வலியுறுத்தல்

    வயது காரணமாக பைடன் வெளியேற வேண்டும் என கருதிய காங்கிரஸ் உறுப்பினர்கள்

    அதிபர் ஜோ பைடன் கடந்த சில மாதங்களாக வயது காரணமாக ஏற்பட்ட மறதியினால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

    அதனால் அவர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட முடியாது எனவும், அவர் வெளியேற வேண்டும் எனவும் கிடைத்த 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.

    டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கும் திறன் மற்றும் அவரது மனக் கூர்மை ஆகியவற்றில் நம்பிக்கையை இழந்த ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு தொடர் அழுத்தம் தந்து வந்தனர்.

    பைடன் பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்களில் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் அடங்குவர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தேர்தல்

    இன்னும் 4 நான்கு மாதங்களில் தேர்தல்

    46வது அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் இருந்து பைடன் விலகியமை, ஜனநாயகக் கட்சியை ஒரு அசாதாரண நிலையில் வைத்துள்ளது.

    ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதமும், நவம்பர் 5 தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.

    பைடன் வெளியேறிய நிலையில், டிரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸ்-ஐ நிறுத்துவதற்கு ஜனநாயக கட்சியின் முக்கிய ஆளுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜோ பைடன்
    அமெரிக்கா
    தேர்தல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜோ பைடன்

    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா

    அமெரிக்கா

    ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு வணிகம்
    அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்  உலகம்
    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்  துப்பாக்கி சூடு
    பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார் இந்தியா

    தேர்தல்

    தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம்
    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது கேரளா
    நோட்டா வென்றால் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் நயினார் நாகேந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025