NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்

    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில், ​​"அச்சுறுத்தல்" என்று தவறாகக் கருதி மூன்று பணயக் கைதிகளை அதன் படைகள் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    காசா நகரில் உள்ள அடர்ந்த பகுதியான ஷெஜாயாவில் போரின் போது, ​​இஸ்ரேலிய இராணுவம், "மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை அச்சுறுத்தலாக தவறாக அடையாளம் கண்டுகொண்டது" என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

    ராணுவ வீரர்கள் மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.

    கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்கள் இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேலால் கொல்லப்பட்ட மூவரும் அக்டோபர் 7 தாக்குதலில், கிப்புட்ஸ் கஃபர் ஆசா பகுதியில் இருந்து, ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளை பிடித்து செல்லப்பட்டவர்கள்.

    2nd card

    தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம்

    சமர் தலால்கா, யோதம் ஹைம் மற்றும் அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் கொல்லப்பட்ட பணயக் கைதிகளாக, இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    தவறான தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் உடனடியாக, இந்த விவகாரத்தில் பகுப்பாய்வு செய்ய தொடங்கி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    "இந்த துயர சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது மற்றும் குடும்பங்களுக்கு அதன் இதயப்பூர்வமான இரங்கலை கூறிக்கொள்கிறது.

    காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் மீட்பதே எங்கள் தேசியப் பணி" என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3rd card

    பணயக் கைதிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

    பணயக் கைதிகள் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர்,"முழு இஸ்ரேல் மக்களுடன் சேர்ந்து, எங்கள் மூன்று பணயக் கைதிகளின் மரணத்திற்கு ஆழ்ந்த துக்கத்தில் தலை வணங்குகிறேன்.

    இது தாங்க முடியாத சோகம். இஸ்ரேல் அவர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது" என தெரிவித்திருந்தார்.

    முன்னதாக இந்த வாரத்தில், காசா பகுதியில் இருந்து இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 3 இஸ்ரேலிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    ஹமாஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்
    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  பாலஸ்தீனம்
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு கனடா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்

    ஹமாஸ்

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025