இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
பல மாதங்களுக்கு நடைபெறலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள இப்போரில், இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கை பேரழிவுகளை அதிகப்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
முதலில் வடக்கு காசாவில் இருந்து தெற்கு நோக்கி நகர பாலஸ்தீனர்களுக்கு உத்தரவிட்ட இஸ்ரேல், பின்னர் நகரின் தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை தொடங்கியது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, புகலிடம் தேடி பாலஸ்தீனியர்களை மேலும் சிறிய பகுதிகளுக்கு விரட்டுகிறது.
பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தாலும், போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவம் போரை தீவிரப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
2nd card
20,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
சமீபத்திய ராணுவ தாக்குதல்களில், மிக மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவரும் இஸ்ரேலின் காசா தாக்குதலில், தற்போது வரை 20,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 240 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சகம், பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினரின் உயிரிழப்புகளை வேறுபடுத்துவதில்லை.
மேலும், அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,120 இஸ்ரேலிகள் கொல்லப்பட்ட நிலையில், 240க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்னமும் நூற்றுக்கணக்கானோர் காசாவில் சிக்கி உள்ளதாக நம்பப்படுகிறது.
3rd card
பைடன் மற்றும் கத்தார் எமிர் பணயக்கைதிகள் விடுதலை பற்றி பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கத்தார் எமிர் ஆகியோர், பணயக்கைதிகள் விடுதலை, காசாவிற்கு அதிக மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஆகியவற்றை குறித்து பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மத்தியில், கத்தார் மற்றும் எகிப்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்க குடிமக்கள் உட்பட ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான அவசர முயற்சி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்" என வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.