NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2023
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அக்டோபர்-7 அன்று கடத்திச்செல்லப்பட்ட பணயக்கைதிகளில் 50 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று இரு தரப்பும் புதன்கிழமை அறிவித்தன.

    இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை இரவு முழுவதும் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.

    அந்த கூட்டத்தின்போது, அவர் "கடினமான முடிவு, ஆனால் இது சரியான முடிவு" என்று அமைச்சர்களிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் AFPஇடம் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறைந்தது 50 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    card 2

    10 கூடுதல் பணயக்கைதிகளுக்கு, ஒரு நாள் கூடுதல் போர் நிறுத்தம்

    மேலும் அவர், விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு 10 கூடுதல் பணயக்கைதிகளுக்கும், ஒரு கூடுதல் நாள் போர்நிறுத்தம் இருக்கும் என ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

    மறுபுறம், ஹமாஸ் அமைப்பு, "மனிதாபிமான போர்நிறுத்தத்தை" வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    தொடர்ந்து, இஸ்ரேலிய சிறைகளில் இருந்தும், 150 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தங்கள் அன்றாட வாழ்க்கையை தொலைத்து விட்ட காஸா வாசிகளுக்கு இந்த தற்காலிக போர் நிறுத்தமானது, சற்று நிம்மதியை தரக்கூடும்.

    முன்னதாக மனிதாபிமான போர்நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தத்திற்கு ஆளானது. தற்போது, இந்த போர் இடைநிறுத்தத்திற்கு, மத்தியஸ்தராக செயல்பட்டது கத்தார் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    போர்
    ஹமாஸ்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர் இஸ்ரேல்
    அக்டோபர் 7 தாக்குதல் போல மற்றொரு தாக்குதலை நடத்தவும், இஸ்ரேலை அழிக்கவும் ஹமாஸ் சபதம் ஹமாஸ்
    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்
    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் காசா
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்  பாலஸ்தீனம்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    ஹமாஸ்

    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025