
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டார் என AFP செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஈரானிய அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை அடைந்துவிட்டதாகக் கூறினார். தனது அறிக்கையில் "பாதுகாப்பில் ஆதரவு அளித்ததற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் பங்கேற்றதற்கும்" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை டிரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்ததுள்ளது. இது 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Prime Minister Benjamin Netanyahu says Israel accepts a ceasefire and that it has achieved war goals against Iran. Follow AP's live updates. https://t.co/GqFUJ0rsSI
— The Associated Press (@AP) June 24, 2025
ஈரான்
போர் நிறுத்தத்தை ஈரானும் ஏற்றுக்கொண்டது
முன்னதாக ட்ரூத் சோஷியலில் தனது செய்தியில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் "இறுதிப் பணிகள்" முடிந்த பிறகு போர் நிறுத்தத்தை தொடங்கும் என்று டிரம்ப் கூறினார். எனினும், ஈரான் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அந்தக் கூற்றை நிராகரித்து, அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு முடிவு தலைகீழாக மாறியது போல், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது. பின்னர், டிரம்ப் - ட்ரூத் சோஷியலில் ஒரு புதிய பதிவில் - போர் நிறுத்தம் இப்போது அமலில் இருப்பதாகவும், டெல் அவிவ் மற்றும் தெஹ்ரான் இரண்டையும் அதை மீற வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.