NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
    ஏப்ரல் 1ஆம் தேதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின. pc: ராய்ட்டர்ஸ்

    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2024
    08:32 am

    செய்தி முன்னோட்டம்

    சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

    இது குறித்து வெள்ளை மாளிகைக்கு எழுதிய ஒரு செய்தியில், ஈரான், "இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வலையில் இழுக்கப்பட வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது" என்று ஈரானிய ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது ஜம்ஷிடி, எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலாக, அமெரிக்க இலக்குகளை தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானிடம் கேட்டுக் கொண்டது என்றும் ஜம்ஷிடி கூறினார்.

    எனினும், ஈரான் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து அமெரிக்கா எந்தக் கருத்தும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

    அமெரிக்கா கவலை

    தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா

    அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இப்பகுதியில் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக ஈரானிடம் இருந்து வரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் CNN தெரிவித்துள்ளது.

    முன்னதாக டமாஸ்கஸில் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்று ஈரானிடம் அமெரிக்கா தனது அதிருப்தியை தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

    மத்திய கிழக்கில் தனது சொந்த படைகள் மற்றும் தளங்கள் தாக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சிப்பதாக அப்போது தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்குதான் இஸ்ரேலுக்கு பதில் தாக்குதல் வழங்க போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

    இருப்பினும், அது எப்போது நடக்கும், ஈரான் இஸ்ரேலை நேரடியாக தகுமா அல்லது லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா போன்ற அதன் பினாமி குழுக்கள் மூலமாக தாக்க முயற்சிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஈரான்
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலகம்
    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு டெல்லி
    ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்
    ஸ்டார்பக்ஸூக்கு எதிராக எழும் முழக்கங்கள்; ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம் வணிகம்

    ஈரான்

    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் தருஷ் மெஹர்ஜுய் கத்தியால் குத்தி கொலை உலகம்

    அமெரிக்கா

    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  விசா
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  உலகம்
    அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்  இந்தியா
    "இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025