NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி
    இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட, 'சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன்.

    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி

    எழுதியவர் Srinath r
    Nov 30, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில்,

    இந்த விவகாரத்தில், தொடர் நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,

    அமெரிக்கா, இந்தியாவிற்கு இடையே முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில், தீவிரவாதிகள் உள்ளிட்டவர்கள் குறித்த தகவல்களை, அமெரிக்கா இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.

    மேலும் இது தொடர்பாக, விசாரிப்பதற்காக நவம்பர் 18ல் இந்தியா சார்பில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2nd card

    இந்தியா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க நீதித்துறை

    இந்திய அரசு அதிகாரி ஒருவர், சீக்கிய பிரிவினைவாத தலைவருக்கு எதிராக தோல்வியுற்ற கொலை முயற்சியை திட்டமிட்டதாக, அமெரிக்க நீதித்துறை நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய, இந்திய குடிமகனான 52 வயது நிகில் குப்தா என்பவர், $100,000 பணத்திற்கு ஒரு நபரை பணியமர்த்த முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால், அந்த பணியமர்த்த முயன்ற நபர் ரகசிய பெடரல் அதிகாரி ஆவார்.

    இந்த கொலை சதி திட்டம் குறித்து, இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் விவாதித்ததாகவும், அவர்கள் "ஆச்சரியம்" மற்றும் "கவலை" அடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    2nd card

    நிகில் குப்தா அவருக்கும் இந்திய அதிகாரிக்கும் தொடர்புள்ளதாக கூறும் அமெரிக்கா

    பெயரிடப்படாத அல்லது குற்றம் சாட்டப்படாத ஒரு இந்திய அரசாங்க அதிகாரியால், குப்தா இயக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

    குப்தா, மே மாதம் இந்திய அரசாங்க ஊழியர் ஒருவரால், படுகொலைகள் செய்வதற்காக பணியமர்த்தப்பட்டதாகவும், இவர்கள் இருவரும் டெல்லியில் சந்தித்து இது தொடர்பாக திட்டமிட்டதாகவும், அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    "நாம், நம் அனைத்து இலக்குகளையும் தாக்குவோம்" என குப்தா அந்த அதிகாரிக்கு செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    மேலும், ஜூன் மாதம் கனடாவில் நிஜார் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள், ரகசிய பெடல் அதிகாரியிடம், "நிஜாரும் அவர்களது இலக்கு" எனக் குப்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    3rd card

    செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்ட குப்தா

    அவர் நியூயார்க் நகரில், கொலை செய்யும் நபரை சந்திக்க விரும்பியதாகவும், அதற்கு பதிலாக, அவர் ஒரு இரகசிய அதிகாரியை சந்தித்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதற்காக ஜூன் 9ஆம் தேதி, குப்தா தனது உதவியாளர் மூலம் $15,000 டாலர்களை வழங்கியதாகவும், அதற்கான புகைப்படம் உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

    மேலும் அந்த குற்றப்பத்திரிகை, இந்திய அதிகாரியால் பணியமர்த்தப்படுவதற்கு முன் குப்தா, சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டுகிறது.

    இது, சர்வதேச குற்றச் செயல்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கையும், சாத்தியமான அரசாங்க கூட்டுறவையும் பரிந்துரைக்கிறது.

    இந்நிலையில், ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் குப்தா செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அமெரிக்கா
    இந்தியா
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா

    அமெரிக்கா

    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்
    துருவ நட்சத்திரத்திலிருந்து சூர்யா பின்வாங்கியது, விஜய் யோஹனை நிராகரித்த காரணம்..: GVM ஓபன் டாக் கௌதம் வாசுதேவ் மேனன்
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் ஹமாஸ்

    இந்தியா

    நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்? ஆதார் புதுப்பிப்பு
    நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உத்தரகாண்ட்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்

    தீவிரவாதிகள்

    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025