Page Loader
ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்

ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2024
09:00 am

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, ​​சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் நிலவில் தீவிர வெப்பநிலை காரணமாக 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சவுதி அதிகாரிகள் அறிவித்தனர். இது குறித்து சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் கூறுகையில், 1,301 இறப்புகளில் 83% பேர், மெக்காவிலும் அதைச் சுற்றிலும் ஹஜ் சடங்குகளைச் செய்ய அதிக வெப்பநிலையில் நீண்ட தூரம் நடந்து சென்ற அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள். அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர், 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்திற்கு மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

உயிரிழப்பு

எகிப்திலிருந்து நுழைந்த அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் 

உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்டோர் எகிப்தியர்கள் எனக்கண்டறியப்பட்டுள்ளது. கெய்ரோவில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள். இதன் தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குச் செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்து இந்த ஆண்டு 50,000 அங்கீகரிக்கப்பட்ட யாத்ரீகர்களை சவூதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது. அடையாளம் காணப்படாத இறந்தவர்களின் உடல்கள் மெக்காவில் புதைக்கப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து டஜன் கணக்கானவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று AP பிரஸ் தெரிவித்துள்ளது.