NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
    இந்த நடவடிக்கைகள், சீனத் தலைவர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன

    சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 15, 2024
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.

    அதன்படி, CIA அமைப்பு, சீனாவில் அதன் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் கருத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது என்று CIA -வின் மூன்று முன்னாள் அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

    ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்தைப் பற்றிய தவறான கதைகளைப் பரப்புவதற்கும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு இழிவான உளவுத் தகவல்களைக் கசியவிடுவதற்கும், போலி இணைய அடையாளங்களைப் உருவாக்கியதாகவும், அதற்காக ஒரு சிறிய குழு இரகசிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    செயல்பாட்டு இலக்குகள்

    சீனாவின் உலகளாவிய செல்வாக்கை சீர்குலைக்க திட்டம்

    தேர்ந்தெடுக்கப்பட்ட CIA செயற்பாட்டாளர்கள், சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் வளரும் நாடுகளுடனான வணிக கூட்டாண்மை உட்பட உலகளாவிய விரிவாக்க முயற்சிகளை குறிவைத்தனர்.

    அவர்கள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பினர் மற்றும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி வீணானது என்று விமர்சித்தனர்.

    அமெரிக்க அதிகாரிகள், நடவடிக்கைகளின் முக்கிய விவரங்களை வழங்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கைகள், சீனத் தலைவர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

    அதனால் சீன அரசாங்கம் இணையப் பாதுகாப்பிற்காக வளங்களைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    சீனா

    சீனாவின் பதில் 

    சீனாவின் வெளியுறவு அமைச்சகம், CIA நடவடிக்கையின் செய்திக்கு பதிலளித்துள்ளது.

    "அமெரிக்க அரசாங்கம், ஊடக தளங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதற்கும், சர்வதேச பொதுக் கருத்தை மாற்றவும் முயற்சி"த்ததாக குற்றம் சாட்டியது.

    அதற்கு CIA அதிகாரிகளோ, அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரிப்பதற்கான சீனாவின் சொந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கான பிரதிபலிப்பே, இந்த இரகசிய பிரச்சாரம் என்று தெரிவித்தனர்.

    தனது ஜனாதிபதி காலம் முழுவதும், டிரம்ப், சீனாவிற்கு மிகவும் வலுவான நிலைப்பாடே கொண்டிருந்தார்.

    எனினும் இந்த இரகசிய நடவடிக்கையின் தாக்கம் தெரியவில்லை, மேலும் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இந்த திட்டத்தை தொடர்ந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    டொனால்ட் டிரம்ப்
    புலனாய்வு
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    சீனா

    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு இந்தியா
    இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக வெளியானது 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)' ஸ்மார்ட்போன்
    சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்  ஒன்பிளஸ்
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    புலனாய்வு

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை சென்னை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி

    அமெரிக்கா

    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  விமானம்
    50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணம்: வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் பெரேக்ரின் லேண்டர் நாசா
    அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை  இலங்கை
    'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்  விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025