Page Loader
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மா அரைசதம்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2025
09:29 pm

செய்தி முன்னோட்டம்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வரலாற்றில் அரைசதம் அடித்த நான்காவது கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் சவுரவ் கங்குலி, சனத் ஜெயசூர்யா மற்றும் ஹான்சி குரோன்ஜே ஆகியோருடன் இணைந்து இறுதிப்போட்டியில் அரைசதம் எட்டிய கேப்டன்களின் பட்டியலில் ரோஹித் இணைந்துள்ளார். மேலும், கங்குலிக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

பார்ட்னர்ஷிப்

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்

ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடினார். இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து, ஷுப்மான் கில்லுடன் 105 ரன்கள் கூட்டணியை உருவாக்கினார். இது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பாகும். இந்த அரைசதம் ரோஹித்தின் 58வது ஒருநாள் அரைசதமாகும். இது அவரது 90 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களுடன் மேலும் சேர்த்தது. நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 1,000 ரன்களை கடந்தார் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 2,500 ரன்களைக் கடந்தார்.