Page Loader
2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்
ஒவ்வொரு ஆண்டும் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2024
02:04 pm

செய்தி முன்னோட்டம்

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கேட்டு, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி என்பது உலக நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு விழா. இது, ஒவ்வொரு ஆண்டும் 4 வருடங்களுக்கு ஒருமுறை வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. தற்போது, 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரிஸில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும், மேலும் 2032ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஒலிம்பிக் நிகழ்வுகள் நடைபெறும். இந்தத் தொடரில், இந்தியா 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும் என பிரதமர் மோடி கூறினார்

முன்னதாக, பிரதமர் மோடி "2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு" என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தில், இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் உள்ள வசதிகள் மற்றும் முறைப்படி தேவையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்திய அரசு ஒலிம்பிக் போட்டி நடத்த உதவும் விதத்தில் வழங்கும் ஆதரவு மற்றும் உதவிகள் பற்றிய விவரங்களும் இந்த விண்ணப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.