NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள்

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 02, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1.

    இன்றைய ஏவலைத் தொடர்ந்து, தற்போது பூமியைச் சுற்றிவரத் தொடங்கியிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம். 16 நாட்கள் பூமியைச் சுற்றி வந்து பின்னர், பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறி முதல் லெக்ராஞ்சு புள்ளியை அடையவிருக்கிறது ஆதித்யா L1.

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிரது. ஆம், உங்களுக்குத் தெரிந்தது தான். சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களுடன், இன்றைய ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநர்கள் அனைவருமே தமிழர்கள். அவர்களைப் பற்றிய சிறுதொகுப்பே இது.

    சந்திரயான்

    சந்திரயான் 1: மயில்சாமி அண்ணாதுரை 

    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் கொத்தவாடி என்ற கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. தன்னுடைய கிராமத்திற்கு அருகேயிருக்கும் பள்ளியிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார் மயில்சாமி.

    கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர், கோயம்புத்தூர் PSG கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும், கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

    1982ல் இஸ்ரோவில் இணைந்த இவர், INSAT திட்டத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டது மட்டுமல்லாமல், நிலவில் தண்ணீரின் இருப்பைக் கண்டறிந்த இந்தியாவில் முதல் சந்திரயான் திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார்.

    மேலும், இந்தியாவின் முதல் செவ்வாய்த் திட்டமான மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்திலும் முக்கியமான பதவியை வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரோ

    வனிதா முத்தையா மற்றும் சுப்பையா அருணன்: 

    மயில்சாமி அண்ணாதுரையின் கீழ் பணிபுரிந்து, சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய வனிதா முத்தையாவும் ஒரு தமிழரே. சந்திரயான் 3யின் வெற்றியில் சந்திரயான் 2 திட்டத்திற்கும் அதிக பங்குண்டு. 90% வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சந்திரயான் 2 திட்டத்தினை வழிநடத்தியவர் வனிதா.

    மீடியாவால் 'ராக்கெட் பெண்மணி' என அழைக்கப்படும் இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சந்திரயான் 2 திட்டத்திற்கு முன்பாக மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்திலும் தன்னுடைய பங்களிப்பை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    செவ்வாய் கிரகத்திற்கான முதல் திட்டமான மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட சுப்பையா அருணனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. திருநெல்வேலியில் பிறந்த இவர் கோயம்புத்தூரில் தன்னுடைய பொறியியல் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

    சந்திரயான் 3

    சந்திரயான் 3: வீரமுத்துவேல் 

    சமீபத்திய திட்டமான சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்டதன் மூலம், இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல்.

    இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோவும், அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இயந்திரப் பொறியியல் பட்டமும் பெற்றிருக்கிறார்.

    சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றபின் 1989-ல் இஸ்ரோவில் பணியில் இணைந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

    1989-ல் இருந்தே இஸ்ரோவில் பணியாற்றி வரும் முத்துவீரவேல், 2016-ல் விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.

    நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கு மிகவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆதித்யா L1

    ஆதித்யா L1: நிகர் ஷாஜி 

    சூரியனை ஆய்வு செய்வதற்காக இன்று இஸ்ரோ செயல்படுத்திய இந்தியாவின் முதல் சூரியத் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தில் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, இஸ்ரோவின் தமிழக திட்ட இயக்குநர்கள் வரிசையில் புதிதாக இணைந்து மீண்டும் தமிழகத்தை அரியணையில் ஏற்றியிருக்கிறார் நிகர் ஷாஜி.

    தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் பிறந்த இவர், செங்கோட்டை அரசுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பையும், திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

    1987ம் ஆண்டு இஸ்ரோவின் இணைந்த இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆதித்யா L1 திட்டத்திற்கு திட்ட இயக்குநராகச் செயல்படுவதற்கு முன்பு இஸ்ரோவின் பல்வேறு விண்வெளித் திட்டங்களில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் நிகர் ஷாஜி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி
    அறிவியல்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இஸ்ரோ

    சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு! சந்திரயான் 3
    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரயான் 3
    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்! சந்திரயான் 3

    விண்வெளி

    சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56 சிங்கப்பூர்
    வாயேஜர்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு, விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவிக்கும் நாசா நாசா
    நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ சந்திரயான் 3
    வாயேஜர் 2-விடமிருந்து மெல்லிய சமிஞ்ஞைகளைப் பெற்ற நாசா நாசா

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே  மு.க ஸ்டாலின்
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் திருச்சி
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்  தமிழக அரசு
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025