NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
    சூரியனை 24x7, 365 நாட்கள் தடையில்லாமல் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், ஆதித்யா-எல்1 இந்த நிகழ்வைத் தவறவிடும்

    முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2024
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமான ஆதித்யா-எல்1 சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இன்று முழு சூரிய கிரகணத்தை அது படம்பிடிக்காது.

    அதற்கு காரணம், இந்த ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், சூரியனை 24x7, 365 நாட்கள் தடையில்லாமல் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வைத் தவறவிடும்.

    இந்நிகழ்வு குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 8, 2024 அன்று, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடக்கும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது."

    ஆதித்யா-L1

    ஆதித்யா L1 இந்த கிரகணத்தை தவறவிட்டது, இஸ்ரோ தவறா?

    ஆதித்யா எல்1 இந்த நிகழ்வைக் காண முடியாதது, இஸ்ரோவின் தவறினால் அல்ல.

    அவர்கள் தெரிந்தேதான் சூரியனை 24x7, 365 நாட்கள் தடையில்லாமல் பார்க்கும் இடத்தில் ஆதித்யா L1-ஐ நிறுத்திவைத்துள்ளனர்.

    இது போன்ற கிரகணத்தின் போதுகூட செயற்கைக்கோளின் பார்வை ஒருபோதும் தடுக்கப்படாமல் இருக்க, இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

    "சந்திரன் விண்கலத்தின் பின்னால் இருப்பதாலும், லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 (எல் 1 புள்ளி) இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாலும், அங்கே கிரகணம் தென்படாது" என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் என்டிடிவியிடம் தெரிவித்தார்.

    ஆதித்யா எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L 1)ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் வைக்கப்பட்டுள்ளது.

    செயற்கை கிரகணம்

    செயற்கையாக உருவாக்கப்படும் கிரகணம்

    உண்மையில், ஆதித்யா எல்1, அதன் சிறப்புக் கருவியான விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப்(VELC) மூலம் சூரியனை திறம்பட ஆய்வு செய்ய, தானே செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.

    இதுபற்றி சோமநாத் கூறுகையில்,"சூரியனின் வட்டில் இருந்து ஒளியை அகற்றுவதன் மூலம், ஒரு சூரிய கிரகணம் கரோனாகிராப்பில் உருவாக்கப்படுகிறது."

    பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIAP) சூரிய இயற்பியலாளர் டாக்டர். திபாங்கர் பானர்ஜி, இந்த கரோனோகிராப் விஞ்ஞானிகளுக்கு விண்வெளியில் இருந்து பார்க்கும் சூரிய கிரகணத்திற்கும், பூமியில் இருந்து பார்பதற்குமான வேர்ப்பட்டை ஆய்வு செய்யவும் வாய்ப்பளிக்கிறது என்கிறார்.

    இன்றைய கிரகணத்தின் போது, ​​பானர்ஜி, அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸில் சில பரிசோதனைகளை மேற்கொள்வார்.

    பின்னர் அந்த தரவு. அதே பார்வைக் காலத்திற்கான ஆதித்யா எல்1 தரவுகளுடன் ஒப்பிடப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதித்யா L1
    சூரிய கிரகணம்
    சூரியன்
    இஸ்ரோ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆதித்யா L1

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் விண்வெளி
    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? விண்வெளி
    எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1 இஸ்ரோ
    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' இஸ்ரோ

    சூரிய கிரகணம்

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. எப்போது?  சந்திர கிரகணம்
    அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? விண்வெளி
    இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி? சூரியன்
    இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன் கூகுள்

    சூரியன்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! ஜப்பான்
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ

    இஸ்ரோ

    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மு.க ஸ்டாலின்
    சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்? சந்திரயான் 3
    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ ககன்யான்
    ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025