NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?
    இந்த ஆண்டு சத் பூஜை நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை கொண்டாடப்படுகிறது.

    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

    எழுதியவர் Srinath r
    Nov 20, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

    குடும்பத்தின் ஒட்டுமொத்த செழிப்புக்காக சூரிய கடவுளை வணங்குவதற்காகவும், அவருடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்காகவும், இப்பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த பண்டிகை நாட்களில், மக்கள் சூரிய கடவுளுக்கு விருந்து படைத்து, கங்கையில் நீராடி, விரதமிருந்து வழிபடுவர்.

    சத் பூஜை கொண்டாடப்படுவதின் வரலாறு, எவ்வாறு கொண்டாடப்படுகிறது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

    2nd card

    சத் பூஜை வரலாறு

    சத் பூஜை கொண்டாடப்படுவது குறித்த வரலாறு, பல விதமாக சொல்லப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஹிந்து மதத்தின் மிகப்பெரிய புராணங்களான மகாபாரதத்துடனும், ராமாயணத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது.

    சூரிய கடவுளின் வழித்தோன்றல் என்று கூறப்படும் பகவான் ராமரால் இப்பூஜை கொண்டாடப்பட்டதாக நம்பப்படுகிறது.

    வனவாசம் முடிந்து அயோதிக்கு திரும்பிய ராமரும், சீதையும் சூரிய கடவுளுக்காக விரதம் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே மக்களும் விரதம் இருந்து இப்பூஜையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

    மகாபாரதத்தை பொருத்தவரையில், சூரியனுக்கும், குந்திதேவிக்கும் மகனாய் பிறந்த கர்ணன், தண்ணீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு, எளியவர்களுக்கு பிரசாதத்தை வழங்கியதை 'சத் பூஜை' என மக்கள் நம்புகிறார்கள்.

    திரௌபதியும், பாண்டவர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்காக, இதேபோன்ற பூஜையை செய்தார்கள் என மற்றொரு நம்பிக்கையும் உள்ளது.

    3rd card

    அறிவியல் முக்கியத்துவம்

    மனித உடம்பில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் சத் பூஜை முக்கிய பங்காற்றுவதால், இப்பூஜைக்கு அறிவியல் ரீதியாக தொடர்புள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

    நீரில் முங்குவதும், மனித உடலை சூரியனுக்கு வெளிப்படுத்துவதும், உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தும் சூரிய உயிர்-மின்சாரத்தின் ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    மேலும் சிலர், எதிர்வரும் குளிர்காலத்திற்காக சத் பூஜை உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் சில வைரஸ் கிருமிகளை வெளியேற்ற உதவுவதாக நம்புகின்றனர்.

    4th card

    எவ்வாறு கொண்டாடப்படுகிறது

    நாள் 1: நஹா கா

    சாத்தின் முதல் நாளில், பக்தர்கள் குளிப்பதற்கு முன் உணவை உட்கொள்ள மாட்டார்கள், அதன் பிறகு அவர்கள் சென்னா சுண்டல் சுண்டல் குழம்பு, பாயாசம், சப்ஜி போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்வார்கள்.

    நாள் 2: கர்ணா கர்ண பூஜை முடியும் வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். அதன் பிறகு வெல்லம் நிறைந்த கீர் மற்றும் பூரிகளின் கலவையை கடவுள்களுக்கு படைத்து, விரதத்தைக் கடைப்பிடித்தவர்களுக்கு விநியோகிப்பார்கள்.

    5th card

    எவ்வாறு கொண்டாடப்படுகிறது

    நாள் 3: பெஹ்லா அர்க்யா

    சாத்தின் கடினமான மற்றும் மூன்றாவது நாளில், பக்தர்கள் (பெரும்பாலும் பெண்கள்)கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    அன்று அவர்கள் தண்ணீரையோ, உணவையோ உட்கொள்ள மாட்டார்கள். சூரியக் கடவுளின் மனைவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள் நாட்டுப்புற பாடல்களுடன் கொண்டாடப்படுகிறது.

    மேலும், பக்தர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவர்.

    நாள் 4: தூஸ்ரா அர்க்யா/ பாரண்

    காலையில் உதயமாகும் சூரியனை வழிபட்ட பின், பக்தர்கள் நீண்ட விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    உத்தரப்பிரதேசம்
    நேபாளம்
    ஹிந்து

    சமீபத்திய

    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்
    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    உத்தரப்பிரதேசம்

    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி  இந்தியா
    கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!  இந்தியா
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்  இந்தியா
    மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம்  காவல்துறை

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    ஹிந்து

    கிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம் தமிழ்நாடு
    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025