Page Loader
சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?
இந்த ஆண்டு சத் பூஜை நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை கொண்டாடப்படுகிறது.

சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

எழுதியவர் Srinath r
Nov 20, 2023
01:26 pm

செய்தி முன்னோட்டம்

வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது. குடும்பத்தின் ஒட்டுமொத்த செழிப்புக்காக சூரிய கடவுளை வணங்குவதற்காகவும், அவருடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்காகவும், இப்பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில், மக்கள் சூரிய கடவுளுக்கு விருந்து படைத்து, கங்கையில் நீராடி, விரதமிருந்து வழிபடுவர். சத் பூஜை கொண்டாடப்படுவதின் வரலாறு, எவ்வாறு கொண்டாடப்படுகிறது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

2nd card

சத் பூஜை வரலாறு

சத் பூஜை கொண்டாடப்படுவது குறித்த வரலாறு, பல விதமாக சொல்லப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஹிந்து மதத்தின் மிகப்பெரிய புராணங்களான மகாபாரதத்துடனும், ராமாயணத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. சூரிய கடவுளின் வழித்தோன்றல் என்று கூறப்படும் பகவான் ராமரால் இப்பூஜை கொண்டாடப்பட்டதாக நம்பப்படுகிறது. வனவாசம் முடிந்து அயோதிக்கு திரும்பிய ராமரும், சீதையும் சூரிய கடவுளுக்காக விரதம் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே மக்களும் விரதம் இருந்து இப்பூஜையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. மகாபாரதத்தை பொருத்தவரையில், சூரியனுக்கும், குந்திதேவிக்கும் மகனாய் பிறந்த கர்ணன், தண்ணீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு, எளியவர்களுக்கு பிரசாதத்தை வழங்கியதை 'சத் பூஜை' என மக்கள் நம்புகிறார்கள். திரௌபதியும், பாண்டவர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்காக, இதேபோன்ற பூஜையை செய்தார்கள் என மற்றொரு நம்பிக்கையும் உள்ளது.

3rd card

அறிவியல் முக்கியத்துவம்

மனித உடம்பில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் சத் பூஜை முக்கிய பங்காற்றுவதால், இப்பூஜைக்கு அறிவியல் ரீதியாக தொடர்புள்ளதாக சிலர் கூறுகிறார்கள். நீரில் முங்குவதும், மனித உடலை சூரியனுக்கு வெளிப்படுத்துவதும், உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தும் சூரிய உயிர்-மின்சாரத்தின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் சிலர், எதிர்வரும் குளிர்காலத்திற்காக சத் பூஜை உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் சில வைரஸ் கிருமிகளை வெளியேற்ற உதவுவதாக நம்புகின்றனர்.

4th card

எவ்வாறு கொண்டாடப்படுகிறது

நாள் 1: நஹா கா சாத்தின் முதல் நாளில், பக்தர்கள் குளிப்பதற்கு முன் உணவை உட்கொள்ள மாட்டார்கள், அதன் பிறகு அவர்கள் சென்னா சுண்டல் சுண்டல் குழம்பு, பாயாசம், சப்ஜி போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்வார்கள். நாள் 2: கர்ணா கர்ண பூஜை முடியும் வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். அதன் பிறகு வெல்லம் நிறைந்த கீர் மற்றும் பூரிகளின் கலவையை கடவுள்களுக்கு படைத்து, விரதத்தைக் கடைப்பிடித்தவர்களுக்கு விநியோகிப்பார்கள்.

5th card

எவ்வாறு கொண்டாடப்படுகிறது

நாள் 3: பெஹ்லா அர்க்யா சாத்தின் கடினமான மற்றும் மூன்றாவது நாளில், பக்தர்கள் (பெரும்பாலும் பெண்கள்)கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அன்று அவர்கள் தண்ணீரையோ, உணவையோ உட்கொள்ள மாட்டார்கள். சூரியக் கடவுளின் மனைவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள் நாட்டுப்புற பாடல்களுடன் கொண்டாடப்படுகிறது. மேலும், பக்தர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவர். நாள் 4: தூஸ்ரா அர்க்யா/ பாரண் காலையில் உதயமாகும் சூரியனை வழிபட்ட பின், பக்தர்கள் நீண்ட விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.