NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் !

    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்

    எழுதியவர் Nivetha P
    Oct 24, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை முடிந்து 10வது நாளாக விஜயதசமியை நாம் கொண்டாடுகிறோம்.

    நவராத்திரி நாட்களான 9 நாட்களும் மகேஸ்வரி, வராகி, கெளமாரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி உள்ளிட்ட 9 சக்தி வடிவங்களை பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு சென்றும், வீட்டிலும் வழிபாடு செய்வதுண்டு.

    தாங்கள் நினைத்தது நிறைவேறும் என்னும் நம்பிக்கையில் தான் இந்த நவராத்திரி வழிபாடுகளை பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

    வரலாறு 

    மும்மூர்த்தி தெய்வங்களால் உருவாக்கப்பட்ட மாகாளி 

    மகிஷன் என்னும் அசுரன் சாகா வரம் வேண்டி பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிகிறான்.

    எந்தவொரு மனிதராலும், அரக்கன், மிருகம் உள்ளிட்ட எந்தவொரு உயிராலும் தன்னை கொல்ல முடியாது.

    கருவில் உருவாகாத பெண்ணை தவிர வேறு யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்னும் வரத்தினை அவன் பெறுகிறான்.

    வரம் பெற்ற ஆணவத்தில் அந்த அசுரன் தேவர்கள், உலக மக்கள் என அனைவரையும் துன்புறுத்த துவங்குகிறான்.

    அவனிடம் இருந்து தங்களையும் இந்த உலகத்தையும் காக்குமாறு தேவர்கள் மும்மூர்த்தி தெய்வங்களான சிவன், நாராயணன் மற்றும் பிரம்மனிடம் சென்று முறையிடுகிறார்கள்.

    அதன் பேரில், இவர்கள் மூவரின் சக்தியும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சக்தி தான் மாகாளி என்று வரலாறு கூறுகிறது.

    நாள் 

    அசுரனை அழித்து வெற்றியடைந்த 10வது நாள் 

    மாகாளியாக உருவெடுத்த துர்க்கை அம்மன், மகிஷன் என்னும் அந்த அசுரனனோடு 9 நாட்கள் போர் செய்து, வெற்றியடைந்த 10வது நாள் தான் இந்த விஜயதசமி.

    வடமாநிலங்களில் இதனை தசரா என்று கூறுகிறார்கள்.

    மகிஷா அசுரனை கொன்றதால் மகிஷாசூரமர்தினி என்னும் பெயராலும் துர்க்கை அம்மனை பக்தர்கள் துதித்து வருகிறார்கள்.

    வெற்றியின் கொண்டாடட்டமாக கருதப்படும் இந்நாளில் எந்தவொரு புது செயலை துவங்கினாலும் வெற்றி பெறலாம் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு 

    ராவணனை ராமன் வதம் செய்த நாள் இன்று 

    தமிழ்நாடு மாநிலத்தில் இன்றைய தினத்தில் குழந்தைகளை முதன்முறையாக பள்ளிகளில் சேர்ப்பது, புதிதாக நடன வகுப்பு, இசை வகுப்பு, உள்ளிட்டவைகளை செய்வார்கள்.

    இன்றைய தினத்தில் துவங்கும் எந்தவொரு செயலும் சிறப்பான முறையில் வெற்றியடையும், கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வடமாநிலங்கள் விஜயதசமியை ராமன் ராவணனை வதம் செய்த நாளாகவும் இந்த தினத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

    கோயில் 

    கோயில்களில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெறும் 

    பத்தாம் நாளான இன்றும் கோயில்களில் பலதரப்பட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    பல கோயில்களில் சண்டி ஹோமம் நடக்கும்.

    இதில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்று என்று கூறப்படுகிறது.

    சண்டி என்றால் முப்பெரும் தேவிகள் என்று அர்த்தமாகிறது.

    மேலும், சிவன் கோவில்கள் அனைத்திலும் பரிவேட்டை என்னும் உற்சவம் நடத்தப்படும்.

    இதில் சிவன் வன்னி மரம் நோக்கி அம்புகளை எய்வார்.

    இதன் பொருள் என்னவென்றால், வன்னி மரம் மனிதனாகவும், அம்பு ஞானமாகவும் கருதப்படுகிறது.

    மனிதனுக்கு சிவன் ஞானத்தை வழங்கும் ஓர் நிகழ்வாக இது நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கல்வி
    நவராத்திரி
    பண்டிகை

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    கல்வி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? இந்தியா

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் கோவில்கள்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு குறிப்புகள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025