NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?
    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?

    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2023
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கிணறு.

    இந்த கிணறு எவ்வளவு மழை பெய்தாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் நிரம்பவே நிரம்பாது என்று கூறப்படுகிறது.

    அதனால் தான் அப்பகுதி மக்கள் இதனை அதிசய கிணறு என்று கூறுகிறார்களாம்.

    கடந்த 2022ம் ஆண்டு இந்த கிணற்றின் அருகேயிருந்த குளம் ஒன்று மழை காரணமாக நிரம்பி உபரிநீர் முழுவதும் மட்டுமின்றி பெருமழை காரணமான வெள்ள நீரும் இந்த கிணற்றுக்குள் தான் விழுந்துள்ளது.

    கிணறு 

    பல கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்தியது 

    பல கன அடி நீரினை உள்வாங்கிய இந்த கிணறு அப்போதும் நிரம்பாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தி விவசாயத்திற்கு நன்மை பயத்தது.

    இது குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் இதனை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அதனை தொடர்ந்து, இந்த அதிசய நிகழ்வு குறித்து அறிந்த சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் அங்கு சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

    ஆய்வு 

    ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின் தகவல்  

    அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த கிணறு முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    மேலும் பல ஆண்டுகாலமாக இந்த கிணற்றில் தண்ணீர் தொடர்ந்து கொட்டி வருவதால், சுற்றியுள்ள பாறைகளில் துளைகள் ஏற்பட்டு அது பெரிதாகி சுமார் 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடியில் நீர்வழிப்பாதையினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

    இதனால் தான் இந்த கிணறு நிரம்புவதுமில்லை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் பயன்படுகிறது என்று அவர்கள் நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    கோரிக்கை 

    பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது 

    இந்நிலையில், கடந்த 17ம் தேதி பெய்த கனமழையால் 100ல் இருந்து 200 கன அடி நீர் வரை இந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

    எனினும், இந்த கிணறு நிரம்பாமல் தான் இருந்துள்ளது.

    இதற்கிடையே, கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டு தற்போது அந்த கிணறு நிரம்பியுள்ளது.

    இதையடுத்து, தமிழக அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணற்றில் சரிந்த மணலை தூர்வாரினால் மட்டுமே சுற்றியுள்ள சுமார் 15கி.மீ.,தொலைவில் அமைந்துள்ள கிணறுகள் அனைத்திலும் நீர்மட்டம் உயரும் என்றும்,

    விவசாயம் மேம்படும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    நிரம்பியது அதிசய கிணறு ?

    நிரம்பியது ஆயன்குளம் அதிசய கிணறு #TNRains | #Ayankulam | #VelichamTV pic.twitter.com/yYfBTMjFUF

    — Velicham TV (@velichamtvtamil) December 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    கனமழை
    சென்னை
    ஐஐடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வெள்ளம்

    சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம்  சிக்கிம்
    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்  கனமழை
    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி
    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு பெங்களூர்

    கனமழை

    மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ்
    மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  ஆந்திரா
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை

    சென்னை

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து வைரமுத்து
    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    நலமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியீடு மருத்துவமனை
    தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்  வெள்ளம்

    ஐஐடி

    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  மும்பை
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! சென்னை
    "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை  மும்பை
    சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025