Page Loader
NDA மட்டுமல்ல UPA கால பட்ஜெட்டிலும் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதா? அண்ணாமலை வெளியிட்ட தகவல்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் என எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை

NDA மட்டுமல்ல UPA கால பட்ஜெட்டிலும் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதா? அண்ணாமலை வெளியிட்ட தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2024
12:54 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் ஒரு சார்பாக நிதிகள் ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட இடம்பெறவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, எப்போதும் கூறும் திருக்குறளும் இல்லையென தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போல நிலையில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் என எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை பதிலடி 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது என்றார். நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

அண்ணாமலை வெளியிட்ட தகவல்

UPA ஆட்சி

6 ஆண்டுகளாக விடுபட்ட தமிழகத்தின் பெயர்

மேலும் அவர், "திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?" என கேள்வி எழுப்பினார். தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை எனவும் அவர் சாடினார்.