Loading...
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்: இதன் முக்கியத்துவம் என்ன?
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்: இதன் முக்கியத்துவம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2026
10:31 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக செல்கிறார். நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் சிக்டெல் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது நேபாள அதிபர் ராம்சந்திர பௌடேல், இந்திய ராணுவத் தளபதி தீரஜ் சேத்திற்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பட்டத்தை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

கோர்கா படை

கோர்கா வீரர்கள் சேர்க்கை மற்றும் அக்னிபத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை

இந்தப் பயணத்தின் போது ராணுவ மரபு சார்ந்த நிகழ்வுகள் தவிர, நேபாள நாட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் ராணுவத் தளபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக, இந்திய ராணுவத்தில் நேபாள கோர்கா வீரர்களை மீண்டும் சேர்ப்பது மற்றும் அக்னிபத் திட்டத்தின் கீழ் அவர்களின் சேர்க்கையைத் தொடர்வது குறித்து இதில் முக்கியமாக ஆலோசிக்கப்படலாம்.

சமீபத்தில் நேபாள முன்னாள் கோர்கா வீரர்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ராணுவ மரபு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ராணுவ மரபு

இந்திய மற்றும் நேபாள ராணுவத் தளபதிகள் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டின் கௌரவ ஜெனரல் பட்டத்தை வழங்கி கௌரவிக்கும் அரிய பாரம்பரிய மரபு பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

வரலாற்று ரீதியாக நேபாளத்திற்கு வரும் இந்திய ராணுவத் தளபதிகள் அந்நாட்டின் பிரதமரையும் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 4 மாதங்களாக பதவியில் இருக்கும் நேபாள பிரதமர் ஷா, இந்திய மற்றும் சீனத் தூதர்களை தனித்தனியாக சந்தித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்திய ராணுவத் தளபதியையும் சந்திக்க உள்ளார்.

ADVERTISEMENT