NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
    யுபிஎஸ்சி: மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை

    UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2025
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

    தமிழக மாணவர்களில், சிவச்சந்திரனுடன் தமிழ் மொழியில் தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேசிய அளவில் சக்தி துபே, ஹர்ஷிதா காயல் மற்றும் கோங்ரே அர்சித் பராக் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 14,627 பேர் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

    செப்டம்பரில் இறுதி தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    From aspiration to achievement, a proud moment for the state🚀
    Congratulations to Mr. B. Sivachandran, a proud beneficiary of Naan Mudhalvan, for securing All India Rank 23 and emerging as Tamil Nadu Rank 1 in UPSC 2024-25.#NaanMudhalvan #UPSC2024 #TamilNaduTopper pic.twitter.com/lM7APSuZ1G

    — Naan Mudhalvan - TN Skill (@naan_mudhalvan) April 22, 2025

    முதல்வர் பாராட்டு

    தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அதில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மூவருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; ஒவ்வொருவரும் முதல்வனாகும் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த நன்னிலை தருகிறது!" என்றும், "பல்லாயிரம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலத்தில் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    எது மகிழ்ச்சி?

    நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    பல்லாயிரக்கணக்கான மாணவர்களின்… https://t.co/zw3iSTDc8c

    — M.K.Stalin (@mkstalin) April 22, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஎஸ்சி
    ஐஏஎஸ்
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    யுபிஎஸ்சி

    பயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள் தேர்வு
    1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார்  ஐஏஎஸ்
    பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது தேர்வு
    பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது டெல்லி

    ஐஏஎஸ்

    தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் தமிழக அரசு
    அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி? மகாராஷ்டிரா
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு

    மத்திய அரசு

    எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர்
    மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடர்
    2024-25 ஆம் ஆண்டில் ₹1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; மத்திய அரசு அறிக்கை ஜிஎஸ்டி
    UPI பரிவர்த்தனைகளுக்கான வணிகர் கட்டணம்: உங்கள் ட்ரான்ஸாக்ஷன் விலை ஏறுமா? யுபிஐ

    தமிழ்நாடு

    தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்து மு.க.ஸ்டாலின்
    சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம் விமானம்
    தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு கோடை விடுமுறை
    ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து ரம்ஜான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025