NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 
    சுதந்திர போராட்ட வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்நதார்.

    'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 15, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.

    ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவிய பின் செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

    இந்தியர்களை 'குடும்ப உறுப்பினர்களே!' என்று அழைத்து தன் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், தற்போது மக்கள் தொகையில் முன்னணி நாடாகவும் இந்தியா உள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில் உள்ள எனது குடும்பத்தைச் சேர்ந்த 140 கோடி பேர் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்" என்று கூறினார்.

    திஜுவ்க்

    'மணிப்பூருக்கு அமைதியின் மூலமே தீர்வு காண முடியும்'

    அதன் பிறகு, "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று சுதந்திர போராட்ட வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்நதார்.

    மணிப்பூரில் இரண்டு மாதங்களாகியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்து பேசிய அவர் "இந்தியா மணிப்பூர் மக்களுக்கு துணையாக உள்ளது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய அரசும், மாநில அரசும் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன." என்று தெரிவித்தார்.

    மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிஜியூ

    'எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நன்றி'

    அந்த விவகாரத்தை குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, "நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு" என்று தெரிவித்தார்.

    மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். இன்று, சிவில் ஏவியேஷன் துறையில் அதிகபட்ச விமானிகளை இந்தியா கொண்டுள்ளது என்று பெருமையுடன் கூறலாம். பெண் விஞ்ஞானிகள் சந்திரயான் பணியை வழிநடத்துகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி 20 நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன" என்று கூறினார்.

    "எனது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் திறனுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்றும் அவர் கூறினார்.

    ஜெகின்

    'பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கைகளை எடுப்போம்'

    பின், நாட்டில் நிலவும் பணவீக்கம் குறித்து பேசிய அவர், "கொரோனாவில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. போர்(உக்ரைன் போர்) மற்றொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அதன் பிடியில் வைத்துள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் போது, நாம் துரதிர்ஷ்டவசமாக பணவீக்கத்தையும் இறக்குமதி செய்கிறோம். ஆனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை எனது நாட்டின் குடிமக்கள் மீது விழாமல் இருக்க நான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் அந்த நடவடிக்கைகளை எடுப்போம். எனது முயற்சிகள் தொடரும்" என்று கூறியுள்ளார்.

    பிவெ

    '2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும்'

    இதற்கிடையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா(வளர்ச்சியை) நிறுத்தாது என்று உலக வல்லுநர்களும் அனைத்து மதிப்பீட்டு நிறுவனங்களும் நம் நாட்டைப் பாராட்டுகின்றன. உலகப் போருக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கு உருவானது. அதே போல், COVID-19 க்குப் பிறகு ஒரு புதிய உலக ஒழுங்கு வடிவம் பெறுவதை என்னால் பார்க்க முடிகிறது." என்று கூறினார்.

    "2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இன்று 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2047ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​ இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதை இலக்காகக் கொள்ள வேண்டும்." என்றும் பிராட்மர் மோடி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பிரதமர் மோடி
    சுதந்திர தினம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    டெல்லி

    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  லடாக்

    பிரதமர் மோடி

    'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு  பிரான்ஸ்
    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு  பிரான்ஸ்
    'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி கைலியன் எம்பாபே
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025