NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல் 

    4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2024
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் பிடிபட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள சுசனா சேத்(39), துண்டு அல்லது தலையணையைப் பயன்படுத்தி தனது மகனின் மூச்சை நிறுத்தி கொன்றதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதே பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையில், சிறுவனின் கொலை திட்டமிடப்பட்டதாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அவர் தனது மகனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு சுசனா சேத் மீது சந்தேகம் வரவே அவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீஸார் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சுசனா சேத்தை பிடித்தனர்.

    ட்ஜ்கவ்ன்

    சுசனா சேத்தின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட இருமல் சிரப் பாட்டில்கள் 

    அவரை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த கொலை எதற்காக நடந்தது என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    நான்கு வயது சிறுவனை அவனது தாயார் சுசனா சேத் கொலை செய்தது திட்டமிட்டு நடந்ததாக போலீசார் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து சில காலியான இருமல் சிரப் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அதுவும் சிறுவனின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    விசாரணையின் போது, சுசனா சேத், கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். மேலும், தான் தூங்கி எழுந்த போது குழந்தை இறந்து கிடந்தது என்றும் கூறியுள்ளார்.

    டித்ஹப்கஜ்க்வ்

    பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டது சிறுவனின் உடல் 

    அந்த நான்கு வயது சிறுவனின் தந்தை வெங்கட் ராமன், தனது குழந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் செவ்வாய்க்கிழமை மாலை ஜகார்த்தாவிலிருந்து இந்தியா திரும்பினார்.

    வெங்கட் ராமன், கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு வந்ததும், தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தார்.

    இன்று அவரது மகனின் உடல் பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டது.

    கோவாவின் மபுசா நகர நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

    சிஇஓ சுசனா சேத்தும் அவரது கணவர் வெங்கட் ராமனும் பிரிந்துவிட்டனர். தற்போது விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கொலை

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    பெங்களூர்

    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  போராட்டம்
    பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்  விபத்து
    வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள் வைரல் செய்தி
    IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு  வணிகம்

    கொலை

    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  உச்ச நீதிமன்றம்
    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? டெல்லி
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025