NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது 

    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2024
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.

    செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப்பான மைண்ட்ஃபுல் AI லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நேற்று ஒரு பையில் வைத்து தனது மகனின் உடலை எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்.

    வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனது இளம் மகனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

    சுசனா சேத், கடந்த சனிக்கிழமையன்று தனது மகனுடன் வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பனியன் கிராண்டேவுக்குச் சென்றார்.

    க்ஜ்கன்ஸ்,

    சந்தேகத்திற்கிடமான விஷயத்தை புகார் அளித்த கோவா ஹோட்டல் ஊழியர்கள் 

    அதன்பிறகு, நேற்று தனியாக அறையை விட்டு வெளியேறிய அவர், பெங்களூரு செல்ல ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்யும்படி ஹோட்டல் ஊழியர்களிடம் கூறினார்.

    விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர் டாக்ஸியில் தான் செல்வேன் என்று கூறிவிட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவருடன் அவரது மகன் இல்லாததையும் ஹோட்டல் ஊழியர்கள் கவனித்திருக்கின்றனர்.

    அவர் வெளியேறிய பிறகு, அவர் தங்கியிருந்த அறையில் இரத்தக் கறைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து, கோவா காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறையினர் அவர் சென்ற டாக்ஸிக்கு தொடர்புகொண்டு, சுசனா சேத்திடம் அவரது மகன் குறித்து விசாரித்திருக்கின்றனர்.

    அப்போது, தனது மகன் தன்னுடைய நண்பரின் வீட்டில் இருப்பதாக கூறிய சுசனா சேத், ஒரு பொய்யான முகவரியை போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார்.

    பிக்க்ஜ்வ்

    டாக்ஸி டிரைவரின் உதவியுடன் சுசனா சேத்தை பிடித்த கோவா காவல்துறை 

    அது பொய்யான முகவரி என்று தெரிந்ததும் மீண்டும் அந்த டாக்ஸி டிரைவரை தொடர்பு கொண்ட கோவா காவல்துறையினர், சுசனா சேத்துக்கு புரியாதபடி கொங்கணி மொழியில் பேசி உடனடியாக டாக்ஸியை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு திருப்புமாறு டிரைவரிடம் கேட்டு கொண்டனர்.

    பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் இருக்கும் சித்ரதுர்காவில் உள்ள காவல் நிலையத்திற்கு வண்டியை திருப்பி விடுமாறு கோவா காவல்துறை அந்த டிரைவரிடம் கேட்டு கொண்டது.

    அந்த டிரைவர் காவல்துறையினர் சொன்னது போல் செய்ததையடுத்து, ​​சித்ரதுர்கா போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர்.

    மேலும் அவர் கொண்டு சென்ற பையில் இருந்த அவரது மகனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

    அதன் பின், கோவா காவல்துறையினர் சுசனா சேத்தை விசாரணைக்காக மீண்டும் கோவாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா
    கோவா
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    பெங்களூர்

    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! காவல்துறை
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  போராட்டம்
    பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்  விபத்து

    இந்தியா

    2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள் கார்
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை உத்தரப்பிரதேசம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து  நரேந்திர மோடி

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED இந்தியா
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! தொழில்நுட்பம்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா

    காவல்துறை

    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025