NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு
    ரயில் மோதி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: தெற்கு ரயில்வே

    உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 03, 2024
    09:41 am

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு, தெற்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

    மேலும், குப்பை அள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத ஒப்பந்த நிறுவனத்தை தடை செய்வதற்கான பணியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

    தண்டவாளத்தின் தூய்மையைப் பராமரிக்க, தண்டவாளத்தில் இருந்து குப்பை எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே வழக்கமாக வழங்குகிறது.

    இதில் ரயில் பாதையில் வரும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடு உள்ளது.

    இதனால் தொழிலாளர்கள் ரயில் வரும்போது பாதையை விட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும்.

    ஒப்பந்தம்

    குப்பை எடுக்கும் ஒப்பந்தம்

    இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், ஷோரனூர் யார்டு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குப்பை எடுப்பதற்கான ஒப்பந்தம் ஒப்பந்த எண். SR/PGT/Civil/2023/0009 தேதியிட்ட 07.02.2023 இன் கீழ் ஒப்பந்ததாரர் M/s முனவர் தோணிக்கடவத் எச்-மலப்புரம் என்பவருக்கு வழங்கப்பட்டது.

    கிமீ 1/200-600 இல் அமைந்துள்ள எஃகுத் தகடு கர்டர் பாலமான பாரதப்புழா பாலம் மற்றும் சம்பவம் நடந்த இந்தப் பாலம் அவர்களின் ஒப்பந்த எல்லைக்குள் வராது.

    எல்.சி எண். 1 மற்றும் பாரதப்புழா ரயில்வே பாலத்தின் எர்ணாகுளம் அப்ரோச் (அதாவது கி.மீ. 1/600-1/900) இடையே உள்ள பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. இதற்காக லெவல் கிராசிங் வழியாக நேரடி சாலை வசதி உள்ளது.

    விபத்து

    விபத்து நடந்தது எப்படி?

    பணி முடிந்ததும், சுமார் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர், சாலையைப் பயன்படுத்தாமல், மறுபுறம் ரயில் பாலத்தைக் கடந்து ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.

    அதுவும் ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மற்றும் ரயில்வே பணியாளர்களின் அனுமதியின்றி நடந்துள்ளது.

    அன்றைய தினம் பாலத்தில் ரயில்வே பணிகள் எதுவும் திட்டமிடப்படாததால், பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு வழங்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, நான்கு பேர் ரயிலில் அடிபட்டனர்.

    அப் லைன் பக்கத்தில் உள்ள பாலத்தில் மணிக்கு 30கிமீ வேகக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தொழிலாளர்கள் டவுன் லைன் பக்கத்தில் எந்த வேகக் கட்டுப்பாடும் இல்லாத பாலத்தில் சென்றுள்ளனர்.

    அதே நேரத்தில் ரயில் எண்: 12626 கேரளா எக்ஸ்பிரஸ் பாலத்தின் மீது டவுன்லைன் பாதையில் நுழைந்தது.

    கிரிமினல் நடவடிக்கை

    ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு

    துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் 3 தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது மற்றும் ஒரு தொழிலாளி ஆற்றில் குதித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் வரும் ரயில்கள் குறித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கருணைத் தொகை ரூ. 1,00,000/- (ஒரு லட்சம்) இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தெற்கு ரயில்வேயின் அறிக்கை

    Update regarding the unfortunate incident at Palakkad Division pic.twitter.com/shdlifLyCt

    — Southern Railway (@GMSRailway) November 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெற்கு ரயில்வே
    கேரளா
    விபத்து
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெற்கு ரயில்வே

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு

    கேரளா

    கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு  கூகுள்
    கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு கைது
    கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு பருவமழை
    கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி பாஜக

    விபத்து

    மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து: 4 பேர் கவலைக்கிடம் இந்தியா
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது மகாராஷ்டிரா
    புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது மகாராஷ்டிரா
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் காவல்துறை

    இந்தியா

    ரயில் விபத்துகளில் நாசவேலைக்கு தொடர்பில்லை? என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் தகவல் ரயில்கள்
    இனி வெளிநாடு வாழ் இந்தியர்களும் புக் செய்யலாம்; ஸ்விக்கியின் அசத்தல் அறிவிப்பு ஸ்விக்கி
    12ஆம் வகுப்பில் தோல்வி; 19வது வயதில் சொந்த நிறுவனம்; ரூ.1,100 கோடிக்கு அதிபதியான அரோராவின் விடாமுயற்சி வணிக புதுப்பிப்பு
    இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு மீனவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025