NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா 
    தனது ஆஸ்தான தொகுதியான ரேபரேலி தொகுதி மக்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் இதை தெரிவித்தார்

    "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    03:20 pm

    செய்தி முன்னோட்டம்

    உடல்நலக் குறைவு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    தனது ஆஸ்தான தொகுதியான ரேபரேலி தொகுதி மக்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் இதை தெரிவித்தார்.

    நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    அதன் பின்னர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

    "உடல்நலம் மற்றும் வயது மூப்பு காரணமாக, அடுத்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இந்த முடிவிற்குப் பிறகு, உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. ஆனால், நிச்சயமாக, என் இதயமும் ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்" என்று சோனியா, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    embed

    சோனியாவின் கடிதம் 

    #SoniaGandhi on Thursday, February 15, in an emotional message, informed the voters of her Rae Bareli constituency in #UttarPradesh that she will not contest the upcoming #LokSabhaelections due to health and age issues. pic.twitter.com/IOhFAfQaRq— News Daily 24 (@nd24_news) February 15, 2024

    ரேபரேலி 

    காந்தி குடும்பத்தின் கோட்டை ரேபரேலி

    சோனியா, 2004 பொதுத் தேர்தலில் ரேபரேலியில் வெற்றி பெற்றார்.

    அன்று முதல், அவரின் ஆஸ்தான தொகுதியாக மாறிப்போனது ரேபரேலி.

    "ரேபரேலியுடன் எங்கள் குடும்பத்தின் உறவு மிகவும் ஆழமானது. சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் எனது மாமனார் பெரோஸ் காந்தியை இங்கிருந்து வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பியுள்ளீர்கள்".

    "அவருக்குப் பிறகு என் மாமியார் திருமதி இந்திரா காந்தியை சொந்தமாக்கிக் கொண்டீர்கள்," என்று சோனியா காந்தி கூறினார்.

    பெரோஸ் காந்தி, 1952 மற்றும் 1957ல் ரேபரேலியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றார்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரன் அருண் நேரு, 1980 இடைத்தேர்தலிலும், 1984ல், ரேபரேலியில் வெற்றி பெற்றார்.

    அடுத்த திட்டம் 

    ரேபரேலியில் பிரியங்காவை நிறுத்த திட்டம்?

    ஜெய்ப்பூரில் நேற்று ராஜ்யசபாவிற்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது திருமதி சோனியா காந்தி உடன் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா உடன் சென்றனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரலில் அந்த இடத்தை நிரப்ப, காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜஸ்தானில் இருந்து மேல் சபையில் அறிமுகமாக உள்ளார்.

    திருமதி சோனியா காந்தி தற்போது தேர்தலில் போட்டியிடாத நிலையில், பிரியங்கா காந்தி வத்ரா 2024 பொதுத் தேர்தலில் ரேபரேலியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சோனியா காந்தி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா

    காங்கிரஸ்

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  நாடாளுமன்றம்
    மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி  மத்திய பிரதேசம்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025