NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை
    சுட்டு கொல்லப்பட்ட நபர், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 41 வயதான அபிஷேக் கோசல்கர்

    ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து அவரை சுட்டுக் கொன்ற நபரும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மும்பை, தஹிசார் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுட்டு கொல்லப்பட்ட நபர், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 41 வயதான அபிஷேக் கோசல்கர்.

    இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கோசல்கரின் மகன் ஆவார். அவரை கொலை செய்தவர் மொரிஸ் நோரோன்ஹா என்பவர் என கூறப்படுகிறது.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    துப்பாக்கி கலாச்சாரம்

    மஹாராஷ்டிராவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்

    முன்னதாக, பகை வேண்டாம் என அபிஷேக், சமரசம் பேசி, மொரிஸ்-ஐ ஃபேஸ்புக் நேரலையில் பங்கு பெற அழைத்துள்ளார். அவரும் சம்மதித்து வந்துள்ளார்.

    நேரலையின் போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை நோக்கி மொரிஸ் சுட்டுள்ளார்.

    ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில் அபிஷேக் சரிந்து விழுந்தார். இது அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில் பதிவானது.

    இதையடுத்து மொரிஸ், தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இருவரது உடலும் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக இருவேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட், சிவசேனா - ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    சிவசேனா
    மும்பை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    சிவசேனா

    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு மகாராஷ்டிரா

    மும்பை

    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு  கிரிக்கெட்
    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025