NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
    கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2024
    07:00 am

    செய்தி முன்னோட்டம்

    பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.

    டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(AIIMS) புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ட்விட்டர் என அழைக்கப்படும் X என்ற சமூக வலைதளத்தில் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தை மோடி பகிரங்கமாக அறிவித்தார்.

    அதன் காரணமாகவே தான் மக்களவை தேர்தலில் பங்குபெறப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    "கடந்த 6 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இப்போது மக்களிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று அறிவித்திருந்தார்.

    இரங்கல்கள்

    சுஷில் மோடிக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன

    நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    "இன்று பீகார் அரசியலின் ஒரு சிறந்த முன்னோடியை என்றென்றும் இழந்துவிட்டது...அவரது மறைவால் பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு நிரப்ப முடியாது" என்று அமித் ஷா தனது வருத்தத்தை தெரிவித்தார்.

    மோடியின் பங்களிப்புகளை ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்,"பீகார் வளர்ச்சிக்காக அவர் செய்த பணி எப்போதும் நினைவுகூரப்படும்" என்று கூறினார்.

    தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் போட்டியாளர்களிடமிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    அவரது அரசியல் பயணம் 

    மாணவர் பருவத்திலேயே துவங்கிய அரசியல் பயணம்

    1970-களில் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மோடி அரசியலில் ஈடுபட்டார்.

    1990ல் பாட்னா மத்திய தொகுதியில் இருந்து முதன்முதலாக எம்எல்ஏ ஆனார். பின்னர், 1996 முதல் 2004 வரை, பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

    2004இல், அவர் பாகல்பூரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு, அவர் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்து சட்டமன்றக் குழுவில் சேர்ந்தார், அதன் பிறகு அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

    அவர் 2020இல் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2022 ஆம் ஆண்டில்,"அனைத்து மோடிகளும் திருடர்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கைக்காக, ராகுலின் பேச்சு, மோடியின் குடும்பப் பெயரைக் கொண்டவர்களை இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தார் சுஷில் மோடி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    புற்றுநோய்
    பீகார்
    எய்ம்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர்
    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் ராகுல் காந்தி
    தேர்தல் 2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார் தென்காசி
    காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப் காங்கிரஸ்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக நோய்த்தடுப்பு சிகிச்சை
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    பீகார்

    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை காவல்துறை
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா
    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் இந்தியா
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  மதுரை
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025