NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
    தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    12:39 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

    முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது.

    இதற்கு இந்தியப் படைகள் விரைவாக பதிலளித்தன.

    எனினும் தொடர்ந்து, இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் ரஜோரி, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர், குஜராத்தில் உள்ள பூஜ் மற்றும் எல்லையோரத்தில் உள்ள பிற நகரங்களில் மின்தடை விதிக்கப்பட்டது.

    தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த பின்னர், இந்தியா இந்த எதிர் தாக்குதலை மேற்கொண்டது.

    ஏவுகணை தாக்குதல்

    இந்தியாவின் ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்

    முன்னதாக வியாழக்கிழமை, நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைக்க பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக இந்தியா கூறியது.

    பாகிஸ்தான் முயற்சிகளை முறியடிப்பதில் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், தரையிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் ஒருங்கிணைந்த எதிர் ஆளில்லா விமான அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல்லி

    டெல்லியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

    பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் பல எல்லை மாவட்டங்களில் பலத்த வெடிப்புகள், சைரன்கள் மற்றும் இருட்டடிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    போர் நினைவுச்சின்னமான இந்தியா கேட் அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், மேலும் அங்கு போக்குவரத்து காவல்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

    "காவல்துறையினர் விழிப்புடன் இருப்பார்கள், சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் கூடுதல் படையை நிறுத்துவோம்," என்று ஒரு காவல்துறை அதிகாரி PTIயிடம் தெரிவித்தார்.

    டெல்லி அரசு தனது ஊழியர்கள் மறு உத்தரவு வரும் வரை விடுப்பில் செல்ல தடை விதித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா
    ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு ஐபிஎல் 2025
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது யூடியூப்
    மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மே 7 ஆம் தேதி பாதுகாப்பு பயிற்சி ஆலோசனை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவு உள்துறை
    நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன? போர்
    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை ஐநா சபை

    இந்தியா

    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை உலக வங்கி
    பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா ரஷ்யா

    இந்திய ராணுவம்

    இந்திய ராணுவத்தின் சம்பவ் ஸ்மார்ட்போன்கள்; சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தையின்போது இந்தியா செய்த சம்பவம் இந்தியா-சீனா மோதல்
    உலக ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025; ராணுவ வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் இந்தியா
    சீன உதிரிபாகங்கள் இருக்கக் கூடாது; 400 ட்ரோன்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்திய ராணுவம் சீனா
    சுயசார்பு மற்றும் கூட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராணுவ தளபதி நம்பிக்கை இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர் சென்னை
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் LeT -இன் சைஃபுல்லா கசூரி யார்? பயங்கரவாதம்
    பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள் பாகிஸ்தான்
    பாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது: அதன் தாக்கம் என்ன? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025