NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்படுவாரா?

    விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2024
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

    மதுபான கொள்கை வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விடுவிக்கப்படுவாரா? அல்லது அவரது ஜாமீன் மனு மறுக்கப்படுமா? என கட்சியினரும் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. முன்னதாக, செப்டம்பர் 5-ம் தேதியன்று இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை பெஞ்ச் ஒத்திவைத்திருந்தது.

    வழக்கு

    மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக CBI வழக்கு

    ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஜூன் 26 ஆம் தேதி மதுபானக் கொள்கையில் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரின் காவலில் இருந்தபோது சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    எனினும், சில வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 12 அன்று, அமலாக்க வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    ஆனால், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருந்தார்.

    இந்த சூழலில் தற்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே கவிதா ஆகியோருக்குப் பிறகு மதுக் கொள்கை வழக்கில் சிறையிலிருந்து வெளிவரும் நான்காவது உயர்மட்டத் தலைவர் ஆவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    உச்ச நீதிமன்றம்
    சிபிஐ
    கைது

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  டெல்லி
    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் இந்தியா
    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? அரவிந்த் கெஜ்ரிவால்
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம்  உத்தரகாண்ட்
    மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  செந்தில் பாலாஜி

    சிபிஐ

    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    நடிகர் விஷால் அளித்த புகாரின் எதிரொலி - வழக்குப்பதிவு செய்த சிபிஐ விஷால்
    மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது  மணிப்பூர்
    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ சிக்கிம்

    கைது

    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி
    திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம் கோவை
    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025