NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
    குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது சிறப்பு மகளிர் கோர்ட்

    சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 30, 2024
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை எலக்ட்ரிக் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்ற இளைஞருக்கு, சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சத்யபிரியா கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார், மேலும் நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரும் இரு தினங்களில் உயிரிழந்தார்.

    ஒரு குடும்பத்தையே ஆட்டி படைத்த அந்த கொலை வழக்கில் காரணமாக இருந்த சதீஷை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியைக் கொலை செய்த வழக்கின் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விபரங்கள்#SunNews | #Chennai | #CrimeAgainstWomen pic.twitter.com/KYE3BdzaXm

    — Sun News (@sunnewstamil) December 30, 2024

    விவரங்கள்

    வழக்கின் விவரங்கள்

    போலீசார் விசாரணையில், சத்யபிரியாவும், சதீஷும் காதலித்து வந்ததாகவும், ஆனால் சதீஷின் நடவடிக்கை பிடிக்காமல் சத்யா பிரியா ஒதுங்க ஆரம்பித்ததால் வெறுப்பான சதிஷ், அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

    இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையில், சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்மானித்தது.

    இன்று,கோர்ட், சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளதுடன், மாணவியை தொடர்ந்து தொல்லை கொடுத்ததற்காக, அவன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்தது.

    இந்த அபராதத்தில், 25,000 ரூபாய் பாதிக்கப்பட்டவரின் சகோதரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், 15,000 ரூபாய்-ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், தமிழக அரசு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மரண தண்டனை
    சென்னை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    மரண தண்டனை

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கத்தார்
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்

    சென்னை

    கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான் புயல் எச்சரிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை மெரினா கடற்கரை
    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025