NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?
    ஒரேபாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டது.

    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 22, 2023
    08:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    இந்த வார தொடக்கத்தில், ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    மேலும், அரசாங்கம் தான் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் தான் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பின் போது என்ன கூறப்பட்டது என்பதை இப்போது பார்க்கலாம்.

    பிஜிவெக்

    ஒரே பாலின திருமண மனுக்கள் மீதான விசாரணை 

    இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.

    இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பத்து நாள் மாரத்தான் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை இந்த வாரம் வழங்கினர்.

    ஒரே பாலின திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பிற நீதிபதிகள் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர்.

    டவ்க்ங்கள்

    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த மூன்று முக்கிய விஷயங்கள் 

    1. இந்திய அரசியலமைப்பிற்கு கீழ் திருமணம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்பதை ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.

    2. சிறப்பு திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்/பெண்(அவள்/அவன்) என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு, பாலினம்-சாராத வார்த்தைகளை(அவர்/நபர்) சேர்க்க முடியாது என்று ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.

    சிறப்பு திருமண சட்ட விதிகளை ரத்து செய்வது, கலப்பு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளை பாதிக்கும் என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் பாலினம்-சாராத வார்த்தைகளை சேர்ப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு தான் உரிமை உள்ளது என்றும் கூறப்பட்டது.

    3. எனினும், ரேஷன்-கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரேபாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டது.

    தில்னவ்க்

    உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருக்கும் பிரச்சனைகள்

    இந்தியாவின் பால்புதுமையினர்களுக்கு(LGBTQIA+) என்ன உரிமைகளை வழங்க முடியும் என்பதை ஆராய உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்வு திருப்திகரமாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த குழுவை எப்போது, எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும், எத்தனை நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற கால வரம்புகளையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

    எனவே, இந்த குழு அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அப்படியே இந்த குழு அமைக்கப்பட்டாலும், இது என்ன உரிமைகளை வழங்க முடியும் என்பதை ஆராய்வதற்கான குழு தானே தவிர, பால்புதுமையினருக்கு உரிமைகளை வழங்கும் குழு அல்ல என்பதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

    பிகியூட்ஜ்

    ஏன் இந்த தீர்ப்பு இந்தியாவை பின் நோக்கி இழுத்து செல்கிறது?

    குயர்(LGBTQIA+) மக்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட கூடாது. இந்திய மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

    எனினும், உச்ச நீதிமன்றமே அந்த மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக வாதிடுகின்றனர் சில மனித உரிமை ஆர்வலர்கள்.

    எனவே, குழந்தைகள் திருமண ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, மறுமண அங்கீகாரம் போன்ற பெரும் வழக்குகளுக்கு நீதி வழங்கிய இந்தியா, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான அதே இந்தியா, பாலின சிறுபான்மையினருக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நேபாளம், தைவான் போன்ற சிறிய ஆசிய நாடுகளைவிட பின்தங்கி இருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு உச்ச நீதிமன்றம்
    LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025