NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக
    அதில் ராகுல் காந்தியின் கூற்றை மறுத்துள்ளது பாஜக

    'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யாகக் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

    ஒடிசாவில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நாளில், ஜார்சுகுடாவில் அவர் ஆற்றிய உரையின் போது காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்தை தொடர்ந்து, பாஜகவின் தலைவர்கள்,'பிரதமரின் ஜாதி குறித்த ராகுல் காந்தியின் அறிக்கை தொடர்பான உண்மைகள்' என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் ராகுல் காந்தியின் கூற்றை மறுத்துள்ளது கட்சி.

    ராகுல் காந்தி

    பிரதமர் மோடியின் சாதி பற்றி ராகுல் கூறுவது என்ன?

    பிரதமர் மோடி தெலி இனத்தைச் சேர்ந்தவர் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

    2000 ஆம் ஆண்டு குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின்ஆட்சிக் காலத்தில், இந்த டெலி OBC பட்டியலில் சேர்க்கப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

    அதற்கு முன்னர் வரை இந்த சாதி ஜெனரல் பட்டியலில் தான் இருந்தது எனவும் அவர் கூறினார்.

    1994 ஆம் ஆண்டில், காங்கிரஸின் சபில்தாஸ் மேத்தாவின் முதல்வர் பதவியில், குஜராத் அரசாங்கம் ஏற்கனவே உள்ள 82 OBC சாதிகளை மேலும் 38 சாதிகளைச் சேர்த்து விரிவுபடுத்தியது.

    அரசு குறிப்பின்படி, பிரதமர் மோடி மோத் காஞ்சி இனத்தைச் சேர்ந்தவர்.

    முன்னதாக ஒடிசாவில், தேர்தலில் வெற்றி பெற்றதும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.

    மத்திய அரசு பதில்

    ராகுல் காந்தியின் கூற்றுகளுக்கு மத்திய அரசு பதில்

    ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டது. தெலி சாதியை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பு காங்கிரஸ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது என்பதை அந்த குறிப்பு தெளிவுபடுத்தியது. "...குஜராத்தில் ஒரு கணக்கெடுப்புக்குப் பிறகு, மண்டல் கமிஷன் இண்டெக்ஸ் 91(A) இன் கீழ் ஓபிசிகளின் பட்டியலைத் தயாரித்தது. அதில் மோத் காஞ்சி சாதி அடங்கும். இந்திய அரசின் குஜராத்தின் 105 ஓபிசி ஜாதிகளின் பட்டியலில் மோத் காஞ்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. .," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கணக்கெடுப்பிற்கு அனுமதி தரவில்லை என குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    பிரதமர் மோடி
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ராகுல் காந்தி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி  காங்கிரஸ்
    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? காங்கிரஸ்
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் காங்கிரஸ்

    பிரதமர் மோடி

    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி

    மோடி

    'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்  இந்தியா
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா இந்தியா

    நரேந்திர மோடி

    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி  ஜி20 மாநாடு
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி இந்தியா
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025