NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்
    இரு நாடுகளும் இந்தியாவை ஓர் அமைதிக்கான பாலமாக கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    08:59 am

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த புதன்கிழமை, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பிரதமர் இட்ட ஒரு பதிவில், 'பிரதமர் மோடி புடினுடன் பேசியதாகவும், ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிடப்பட்டிருந்தது.

    "வரும் ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

    மற்றொரு பதிவில், இந்தியா-உக்ரைன் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து ஜெலென்ஸ்கியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    உக்ரைன்

    இந்தியாவுடனான கூட்டணியை வரவேற்கும் உக்ரைன்

    இதற்குப் பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,"உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி, அமைதிக் கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன்".

    "எங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம், அதில் எங்கள் குழுக்களின் கூட்டம் மற்றும் எதிர்காலத்தில் புதுதில்லியில் ஒத்துழைப்புக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் அமர்வு ஆகியவை அடங்கும்," என்று கூறினார்.

    "இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் உக்ரைன் ஆர்வமாக உள்ளது, குறிப்பாக "விவசாய ஏற்றுமதி, விமான போக்குவரத்து ஒத்துழைப்பு மற்றும் மருந்து மற்றும் தொழில்துறை தயாரிப்பு வர்த்தகம்" ஆகியவற்றில் உக்ரைன் ஆர்வமாக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

    நிலைப்பாடு

    ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு

    புடினின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பல ஐ.நா. வாக்குகளில் இருந்து இந்தியா விலகியிருந்தாலும், இந்திய அரசு தனது அசெளகரியத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை.

    அதே நேரத்தில் உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் ஆதரவளிக்க ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது மற்றும் புச்சாவில் உக்ரேனிய குடிமக்களுக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து, சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி புடினுடனான சந்திப்பில், "இன்றைய சகாப்தம் போரின் சகாப்தம் அல்ல" என்று வலியுறுத்தினார் என செய்திகள் தெரிவிக்கின்றன

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    மோடி
    ரஷ்யா
    உக்ரைன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி  இந்தியா
    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி பிரதமர்
    பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா

    மோடி

    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு பிரான்ஸ்
    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி ராகுல் காந்தி
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி
    'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி கனிமொழி

    ரஷ்யா

    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    "அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை அமெரிக்கா
    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல் பாகிஸ்தான்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா

    உக்ரைன்

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  இந்தியா
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025