NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
    தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது

    பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மையில், அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்த உறுதிமொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை தூண்டியது.

    அவை ஓயும் முன்னரே, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

    சென்னையின் அசோக் நகரில் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றன.

    'தன்னம்பிக்கை' என்ற தலைப்பில், மகாவிஷ்ணு என்பவர் 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்.

    அவர் மாணவர்களுக்கு யோக தீட்சை வழங்குவதும், மறுபிறவி குறித்த கருத்துக்களும் கூறியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது கடந்த கால பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற கூறியதும் விவாதங்களை தூண்டியுள்ளது.

    விசாரணை

    விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித்துறை செயலாளர்

    இந்த உரைகள் ஆசிரியர்களிடையே எதிர்ப்புகளை கிளப்பியுள்ளன, அவர்கள், இது மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.

    இதற்கிடையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் என்பதைப் பற்றிய முழுமையான விசாரணை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    சென்னையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கியதா அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை.

    அதேசமயம், கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளிகளில் நடத்துவது சட்டப்படி தவறானது என்பதற்கான எச்சரிக்கையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் விடுத்துள்ளார்.

    இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து விளக்கம் பெறுவதற்கான ஆணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கருத்து

    முதல்வர் ஸ்டாலினின் கருத்து

    இந்த விவகாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றதும், அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அவர் வெளியிட்ட அறிவிப்புகளில், "பள்ளி மாணவர்களுக்கு முற்போக்கான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கருத்துகளை வழங்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை குறுந்தொகுப்புப் படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தனிமனித முன்னேற்றம், நெறிமுறைகள், மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கருத்துகளை மாணவர்களில் வளர்க்க வேண்டும்" எனக்கூறியுள்ளார்.

    "அறிவியல் வழியே முன்னேற்றத்தை அடையலாம், மேலும் சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் அறிவாற்றலை கூர்மையாக்க செய்ய தேவையான கருத்துக்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். தேவையான புத்தாக்க பயிற்சிகளை சமூக கல்வி துறை வல்லுனர்களால் வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

    மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

    எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.…

    — M.K.Stalin (@mkstalin) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகள்
    பள்ளிக்கல்வித்துறை
    ஸ்டாலின்
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி
    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    பள்ளிக்கல்வித்துறை

    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு
    3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு தமிழக அரசு
    போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்  சென்னை
    பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்  தமிழக அரசு

    ஸ்டாலின்

    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு

    மு.க ஸ்டாலின்

    அழகிரியின் மகன், துரை தயாநிதி வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி மருத்துவமனை
    2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு  சென்னை
    ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம் காங்கிரஸ்
    கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025