NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை 
    அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த பெரிய மாற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 05, 2023
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதிகாரபூர்வமாக ஒரு அரசு அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயர் உபயோகிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    அதுவும் ஒரு சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று குறிப்பிட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.

    ஜேகேவ்

    'பாரதம்' என்ற சொல்லை பயன்படுத்துவதில் எதுவும் பிரச்சனை இருக்கிறதா?

    "பாரதம்" என்ற சொல் அரசியலமைப்பிலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஜி20 கையேட்டிலும் "பாரதம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த பெரிய மாற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    "பாரத குடியரசு - நமது நாகரிகம் அமிர்த காலை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என்று அவர் ட்விட்டரில்(எக்ஸ்) தெரிவித்துள்ளார்.

    சன்ஜக்

    'பாரதம்' என்ற பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 

    குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழ்களில் வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று பொறிக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    "வெளியான செய்திகள் உண்மைதான். செப்டம்பர் 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கும் G20 விருந்துக்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' எனபதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 1, 'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறுகிறது. ஆனால் தற்போது இந்த 'மாநிலங்களின் ஒன்றியம்' என்பதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது." என்று அவர் பாஜகவை சாடியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்விட்டர் பதிவு 

    So the news is indeed true.

    Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of 'President of Bharat' instead of the usual 'President of India'.

    Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023

    டிஹஜ்வ்க்

    இதை இரண்டு நாட்களுக்கு முன்பே கணித்தது ஆர்எஸ்எஸ் 

    இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்தியாவுக்குப் பதிலாக பாரதம் என்று நம் நாடு அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்(ஆர்எஸ்எஸ்) கூறி இருந்தது.

    "இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பாரதத்தின் பெயர் நிலைத்திருக்க வேண்டும். உலகில் எங்கு சென்றாலும் பாரதம், பேச்சிலும் எழுத்திலும் பாரதம் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி இருந்தார்.

    கடந்த ஜூலை மாதம், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என்று பெயரிட்டதில் இருந்தே, INDIAவா பாஜகவா என்ற சர்ச்சை நடந்தது கொண்டிருக்கிறது என்பது குறிப்பிட வேண்டியது.

    பிருஹகி

    நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா?

    செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் இந்தியாவை 'பாரதம்' என மறுபெயரிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முக்கியமாக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலது சாரி அமைப்புகள் இதற்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

    இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியும் முன்பு கூறியிருந்தார். ஆகஸ்ட் 15, 2022 அன்று, செங்கோட்டையின் அரண்களிலிருந்து, ஐந்து உறுதிமொழிகளை எடுக்குமாறு குடிமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    அதில் ஒரு வேண்டுகோள் அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்திலிருந்தும் விடுதலை பெற்று, நாட்டின் பூர்வீக அடையாளத்தைத் தழுவதாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    மத்திய அரசு
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை சீனா
    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் மகாராஷ்டிரா
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31 தங்கம் வெள்ளி விலை

    பாஜக

    இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடி; ஏழை எம்எல்ஏவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்தியா
    ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  மணிப்பூர்
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்

    மத்திய அரசு

    புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்களை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா  ஏர் இந்தியா
    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் நாடாளுமன்றம்
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி
    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல் ஆப்பிரிக்கா

    நரேந்திர மோடி

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா
    பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025