NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
    பிரதமர் நரேந்திர மோடி

    நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 24, 2024
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.

    இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) நேபாள நெடுஞ்சாலையில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    இந்திய விமானப்படை

    உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வரும் பணியில் இந்திய விமானப்படை

    இந்திய விமானப்படை விமானம் விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா யாத்ரீகர்களின் உடல்களை நாசிக்கிற்கு கொண்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

    கோரக்பூரில் இருந்து நாசிக்கிற்கு சிறப்பு விமானம் பறக்க வாய்ப்புள்ளது. அதற்கான அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்கும் என ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    மோசமான சாலைகள், மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின் விளைவாக நேபாள நாட்டில் கொடிய விபத்துக்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவையாக உள்ளது.

    சித்வானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 59 பயணிகளுடன் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவு

    The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Tanahun district, Nepal. The injured would be given Rs. 50,000. https://t.co/qUtVrj4ipF

    — PMO India (@PMOIndia) August 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்
    விபத்து
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    நேபாளம்

    இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை  இந்தியா
    10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!  இந்தியா
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! இந்தியா
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்! கிரிக்கெட்

    விபத்து

    ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர் ஹைதராபாத்
    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம் சத்தீஸ்கர்
    காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி விருதுநகர்
    மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு மும்பை

    பிரதமர் மோடி

    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் குடியரசு தலைவர்
    'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி மக்களவை
    41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி இந்தியா
    'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025