NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
    நேற்றைய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்

    பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2025
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார்.

    நேற்றைய தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியதை பற்றி அவர் தற்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-இடம் விவரித்துள்ளார்.

    விவரம்

    துப்பாக்கி சத்தம், சிதறி ஓடிய சுற்றுலாவாசிகள்

    ஏப்ரல் 19 அன்று சென்னையில் இருந்து ஸ்ரீநகரில் தரையிறங்கினர் ஜெயஸ்ரீ குடும்பத்தார். அங்கிருந்து பயணப்பட்டு பஹல்காம் சுற்றி பார்க்க சென்றிருந்தனர்.

    குதிரை மூலமாக பைசரன் புல்வெளியை "ஐந்து நிமிடங்களில்" அடையவிருந்தனர்.

    "நாங்கள் பஹல்காமிலிருந்து மதியம் 12.45 மணியளவில் குதிரை சவாரி செய்தோம். எங்கள் குதிரை சவாரி வீரர், ஐந்து நிமிடங்களில், சுவிட்சர்லாந்தை ஒத்த இந்தியாவின் மிக அழகான இடத்தைப் பார்க்கப் போகிறோம் என்று எங்களிடம் கூறினார்".

    "அப்போது, ​​சிலர் தங்கள் குதிரைகளுடன், 'திரும்பிப் போ, திரும்பிப் போ, தீவிரவாதிகள் தாக்குதல்' என்று கூறி ஓடிக்கொண்டிருந்தனர். ஐந்து துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டோம்"

    துப்பாக்கி சத்தம் கேட்டதும், அவர்களுடைய குதிரை வீரர், அவர்களுடன் அந்த இடத்திலிருந்து வேகமாக கீழே அழைத்து வந்ததாக ஜெயஸ்ரீ கூறினார்.

    உயிரிழப்பு

    தமிழத்திலிருந்து உயிரிழப்புகள் இல்லை ஆனால் மூவர் பலத்த காயம்

    தமிழ்நாட்டிலிருந்து எந்த உயிரிழப்பும் இல்லை என்றாலும், மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் அங்கே சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் 011-24193300 மற்றும் 9289516712 என்ற உதவி எண்கள் மூலம் மாநில அரசைத் தொடர்பு கொள்ளலாம்.

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பயங்கரவாதம்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    சென்னை

    'சென்னை CEO பசங்க': பாரிஸில் சந்தித்து கொண்ட சுந்தர் பிச்சை மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்  சுந்தர் பிச்சை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

    பயங்கரவாதம்

    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு ரஷ்யா
    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ரஷ்யா
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  இந்தியா
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி விபத்து
    காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம் இந்திய ராணுவம்
    லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு லடாக்
    காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவின் மகத்துவம் சேர்த்த சில ருசியான உணவுகள் இதோ உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025