
தென் மாநிலங்களில் அதிகரிக்கும் சிசேரியன்: தவிர்க்கக்கூடிய அறுவை சிகிச்சைகள் அதிகரிப்பு என ரிப்போர்ட்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் முறையில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஒரு சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறிப்பாக மருத்துவ தேவையின்றி, மருத்துவ சிக்கல்கள் இல்லாமலே திட்டமிட்டு சிசேரியன் முறையை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் போக்கு இருக்கிறது என தெரிவிக்கிறது.
21,500 பெண்கள் மீது நடத்திய ஆய்வில், 44.3% பெண்கள் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுள்ளனர்.
இதில் 13.9% பெண்கள் தவிர்க்கக்கூடிய சூழ்நிலையிலும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்துள்ளனர்.
இதில் தெலுங்கானா மாநிலம் 8.4% கணக்குடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 7% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் 25 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அதிர்ச்சி தகவல் கூறுகிறது.
விவரங்கள்
அதிகரிக்கும் சிசேரியன் போக்குக்கான காரணம் என்ன?
சிசேரியன் சிகிச்சை முறையை தேர்வு செய்பவர்களில் பெரும்பாலானோர் படித்த பெண்கள் எனவும் அதிர்ச்சி தகவல் கூறுகிறது.
அதோடு அவர்கள் தலைப்பிரசவத்தின் பயம் காரணமாக குழந்தையை பெறும் போது சிசேரியனை அதிகம் நாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ளது.
தென் மாநிலங்களில் 96.5% கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் பிரசவம் காண்கிறார்கள்.
இது ஒரு நல்ல முன்னேற்றமாக இருந்தாலும், சிலர் சுகப்பிரசவத்திற்கு முயற்சி எடுக்காமலும், மருத்துவ ஆலோசனையை மீறியும் சிசேரியனை தேர்வு செய்வது சிக்கலான நிலையை உருவாக்குகிறது.
இது குறித்து மருத்துவ வல்லுநர்கள், தேவையில்லாமல் மேற்கொள்ளப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை, தாயும், குழந்தையும் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சிகிச்சைக்கு பிந்திய சிக்கல்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு, குழந்தையின் தாய்ப்பாலூட்டல் சிக்கல்கள் போன்றவை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.