NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
    பனையூரில் ஒரு கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் 100 கோடி கம்பங்கள் நடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்

    எழுதியவர் Srinath r
    Oct 21, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

    நேற்று மாலை அண்ணாமலை வீட்டின் முன்பு, 50 அடி உயரக் பாஜக கொடிக்கம்பம் புதிதாக நிறுவப்பட்டு கொடியேற்று விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கொடிக்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளிடமிருந்து அனுமதி வாங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி இஸ்லாமிய அமைப்பினரும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பாஜகவினருக்கும், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இஸ்லாமியர்கள் பாஜகவினர் இருக்கும் பகுதிக்கு வராமல் இருக்க, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    2nd card

    போராடிய பாஜகவினரை கைது செய்த காவல்துறையினர்

    இப்பிரச்சினை தீவிரமாக அடைவதை தடுக்க 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குறிக்கப்பட்டனர். மேலும் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பாஜகவினர் சிலர் அந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜனிடம், காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் காவல்துறையினர் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்தனர்.

    அப்போது, சாலையில் அமர்ந்து நகர மறுத்த பாஜக உறுப்பினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்றபோது தலையில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டு காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

    3rd card

    தமிழக அரசு எதிர்க்கட்சிகளை பழி வாங்குகிறது- பாஜக மாநிலத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு

    தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதாக, தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

    சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், "கம்பம் மட்டுமே ஊன்றப்பட்டுள்ள நிலையில் ஆட்சேபம் வருவதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இங்கு வந்துள்ளனர்".

    "ராஜீவ் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கொடிக்கம்பம் வைக்கவே கூடாது. அது பொது இடம். அது குறித்து எவ்வளவு புகார்கள் அளித்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" என்ன குற்றம் சாட்டியவர்,

    "ஆனால் கொடிக்கம்பம் மட்டுமே நடப்பட்டுள்ள நிலையில் 300 போலீசார் இங்கு குவிந்துள்ளனர். இது அராஜகம்."

    "இந்த அராஜகத்தையும், தமிழக அரசின் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்

    4th card

    திமுக அதிகார திமிரில் அராஜகம் செய்கிறது- பாஜக தலைவர் அண்ணாமலை

    கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அதிகார திமிரில் அராஜகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    "தீவிரவாதிகள் விடுதலை செய்ய விரும்பும் திமுக அரசு, காரில் வெடிகுண்டுடன் சுற்றுத்திரையும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக அரசு, கொடிக்கம்பத்தை அகற்ற தீவிரவாதிகளை பிடிப்பது போல் படையோடு வந்துள்ளது" என விமர்சித்தார்.

    தமிழக அரசின் இந்த போக்குக்கு எதிராக நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

    மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி நூறாவது கொடிக்கம்பம் போராட்டத்தில் காயம் அடைந்த விவின் பாஸ்கரன் முன்னிலையில், தற்போது அகற்றப்பட்ட இடத்திலேயே நடப்படும் என தெரிவித்தார்

    ட்விட்டர் அஞ்சல்

    பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்

    குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை… pic.twitter.com/scnFwLk0rz

    — K.Annamalai (@annamalai_k) October 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    பாஜக அண்ணாமலை
    அண்ணாமலை
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாஜக

    "எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில்  திமுக
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை  தமிழ்நாடு
    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன? சனாதன தர்மம்
    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்? திமுக

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக

    சென்னை

    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கலைஞர் கருணாநிதி
    போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்  பள்ளிக்கல்வித்துறை
    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம் வந்தே பாரத்
    லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும் இயற்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025