NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 
    பிறந்த ஒரேவாரத்தில் ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை - தாய் உள்பட 4 பேர் கைது

    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    விருதுநகர், ராஜபாளையம் அருகேயுள்ள ஜீவா நகர் பகுதியினை சேர்ந்தவர் முனீஸ்வரன், அவரது மனைவி முத்துசுடலி(36).

    இவர்களுக்கு ஏற்கனவே 6 வயதில் ஓர் மகன் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓர் இளைஞருடன் முத்துசுடலிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு அவர் கர்ப்பம் தரித்துள்ளார்.

    கடந்த 18ம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

    கொலை 

    முன்னதாக குழந்தையை கொலை செய்ய முடிவு ?

    ஏற்கனவே தனக்கு இருக்கும் குழந்தையை வளர்க்கவே சிரமப்பட்டு வந்த முத்துசுடலி, தகாத உறவில் பிறந்த இக்குழந்தையை வளர்க்க பொருளாதார ரீதியாக முடியாது என்பதாலும், கள்ள உறவில் பிறந்த குழந்தை என்பதால் பிரச்சனை ஏற்படும் என்றும் எண்ணி அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

    பின்னர், அந்த எண்ணத்தை கைவிட்டு, குழந்தையை விற்பனை செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

    விற்பனை 

    குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி முத்துசுடலியிடம் விசாரணை 

    இதுகுறித்து அவர், முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரி(54)என்பவரிடம் கூறி ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் ராஜேஸ்வரியின் நண்பரான தென்காசி பகுதியினை சேர்ந்த ஜெயபால் என்பவரது ஆலோசனைப்படி, ஈரோடு மாணிக்கபாளையத்தை சேர்ந்த தம்பிராஜ் என்பவரது மனைவி அசினாவிடம் இந்த ஆண் குழந்தையை ரூ.3.5 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.

    இதற்கு ஈரோட்டினை சேர்ந்த ரேவதி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி முத்துசுடலியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    விசாரணை 

    காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழங்குப்பதிவு 

    அப்போது முத்துசுடலி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    அதன் காரணமாக சேத்தூர் காவல்துறையில் குழந்தைகள் நல மையம் அளித்த புகாரின் பேரில் முத்துசுடலியை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.

    அப்போது குழந்தை விற்கப்பட்டது உறுதியானது.

    அதனை தொடர்ந்து அசினாவிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அசினாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளது.

    தனது தோழி ரேவதி உடன் இணைந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    கைது 

    4 பெண்களை கைது செய்துள்ள காவல்துறை தப்பியோடிய நபரை தேடி வருகிறது 

    மேலும் இந்த ரேவதி மற்றும் அசினா உள்ளிட்ட இருவர் மீதும் பல்வேறு குழந்தை கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கில் தற்போது குழந்தையின் தாய் முத்துசுடலி, ரேவதி, அசினா ,மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பெண்களை கைது செய்துள்ள காவல்துறை, தப்பியோடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    கடத்தல்
    குழந்தைகள்
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    குழந்தைகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை

    கைது

    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு சென்னை
    காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி விபத்து
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025