NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்
    மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்

    விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மிரட்டல் செய்திகள் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தனது நண்பர் ஒருவரை பழிவாங்கவே இந்த சிறுவனால் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    சட்ட நடவடிக்கை

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

    NDTVபடி, 17 வயதான அந்த சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவர் தனது நண்பரின் பெயரில் X இல் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களைப் பதிவு செய்ய பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக மற்ற தகவல்கள் கூறுகின்றன.

    "ராஜ்நந்த்கான் காவல்துறையின் உதவியுடன், 17 வயது சிறுவனுக்கு... அவனது தந்தை மற்றும் X கணக்கைப் பயன்படுத்திய நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் கார்க் கூறினார்.

    அரசு பதில்

    DGCA அதிகாரிகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு

    தனித்தனியாக, பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி காவல்துறை 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

    பல விமான நிறுவனங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறித்து விவாதிக்கவும், அதைச் சமாளிக்கவும் இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டது.

    புதன்கிழமை மட்டும், இண்டிகோ, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, அது பின்னர் புரளி என்று மாறியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்!#SunNews | #HoaxBombThreat | #Chhattisgarh pic.twitter.com/UnONGmw8zf

    — Sun News (@sunnewstamil) October 17, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெடிகுண்டு மிரட்டல்
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    விமானம்

    மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம் விமான நிலையம்
    குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் குவைத்
    ஏர் இந்தியா வணிக வகுப்பில் ஒரு மோசமான பயணஅனுபவம்: பயணி வெளியிட்ட புகைப்படம் வைரல் ஏர் இந்தியா
    சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்  வெடிகுண்டு மிரட்டல்

    விமான சேவைகள்

    வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் ஏர் இந்தியா
    விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது மத்திய அரசு
    12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு விமானம்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025