Page Loader
விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்
மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்

விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது; நண்பனை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2024
10:41 am

செய்தி முன்னோட்டம்

கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிரட்டல் செய்திகள் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தனது நண்பர் ஒருவரை பழிவாங்கவே இந்த சிறுவனால் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்ட நடவடிக்கை

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

NDTVபடி, 17 வயதான அந்த சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவர் தனது நண்பரின் பெயரில் X இல் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களைப் பதிவு செய்ய பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக மற்ற தகவல்கள் கூறுகின்றன. "ராஜ்நந்த்கான் காவல்துறையின் உதவியுடன், 17 வயது சிறுவனுக்கு... அவனது தந்தை மற்றும் X கணக்கைப் பயன்படுத்திய நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் கார்க் கூறினார்.

அரசு பதில்

DGCA அதிகாரிகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு

தனித்தனியாக, பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி காவல்துறை 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். பல விமான நிறுவனங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறித்து விவாதிக்கவும், அதைச் சமாளிக்கவும் இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டது. புதன்கிழமை மட்டும், இண்டிகோ, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, அது பின்னர் புரளி என்று மாறியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post