NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது
    நாய் குறைத்ததற்காக உரிமையாளரை கொலை செய்தவர் கைது. (சித்தரிப்பு புகைப்படம்).

    மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது

    எழுதியவர் Srinath r
    Dec 24, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், வளர்ப்பு நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாயின் உரிமையாளரை கொன்ற 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சாந்தி நகரைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், சனிக்கிழமை இரவு அவரின் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, முசகெடி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    இரவு 10:30 மணி அளவில், குற்றம் சாட்டப்பட்டவர் சமுதாய கூட்டத்தின் அருகில் வந்த போது, அவரை மேலும் முன்னேற விடாமல் நாய் குரைத்துக் கொண்டே இருந்ததாக, ஆசாத்நகர் காவல் நிலைய பொறுப்பாளர் நீரஜ் மேதா தெரிவித்தார்.

    2nd card

    எட்டி உதைத்து கொலை செய்த நபர்

    இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கடுமையாக சத்தமிட்டுள்ளார்.

    சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த நாயின் உரிமையாளரான 65 வயது பெண்ணுடன், அந்த நபருக்கும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக, அந்த அதிகாரி விவரித்தார்.

    பின்னர் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்த பெண்ணை வயிற்றில் உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் மயக்கம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார்.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    மத்திய பிரதேசம்
    வழக்கு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொலை

    மணிப்பூர்: காணாமல் போன 2 மெய்டே மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் மணிப்பூர்
    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர் மணிப்பூர்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி

    மத்திய பிரதேசம்

    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா? கோவில்கள்
    பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி இந்தியா
    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு  இந்தியா
    மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு இந்தியா

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025