Page Loader
மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது
நாய் குறைத்ததற்காக உரிமையாளரை கொலை செய்தவர் கைது. (சித்தரிப்பு புகைப்படம்).

மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது

எழுதியவர் Srinath r
Dec 24, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், வளர்ப்பு நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாயின் உரிமையாளரை கொன்ற 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி நகரைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், சனிக்கிழமை இரவு அவரின் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, முசகெடி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரவு 10:30 மணி அளவில், குற்றம் சாட்டப்பட்டவர் சமுதாய கூட்டத்தின் அருகில் வந்த போது, அவரை மேலும் முன்னேற விடாமல் நாய் குரைத்துக் கொண்டே இருந்ததாக, ஆசாத்நகர் காவல் நிலைய பொறுப்பாளர் நீரஜ் மேதா தெரிவித்தார்.

2nd card

எட்டி உதைத்து கொலை செய்த நபர்

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கடுமையாக சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த நாயின் உரிமையாளரான 65 வயது பெண்ணுடன், அந்த நபருக்கும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக, அந்த அதிகாரி விவரித்தார். பின்னர் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்த பெண்ணை வயிற்றில் உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.