NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 
    பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு

    பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 15, 2023
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டிற்கான விருதுக்கு இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனுள் தெற்கு ரயில்வே அளவிலான 3 அதிகாரிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    இவர்களுள் மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பாளராக பணியற்றி வரும் கே.வீரப்பெருமாள் என்பவர் தேசிய விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளன.

    இவர் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்துள்ளார்.

    விருது 

    மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்குவார்

    அந்த வழியே சென்னை-தஞ்சாவூர்-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரயில் பாதையின் எதிர்புறம் ஓடி சென்று சிவப்பு கொடியினை காண்பித்து ரயிலை நிறுத்தினார்.

    இதனால் நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நிலைமை அறிந்து துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய இவருக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

    அதனை தொடர்ந்து, தற்போது இவரின் இந்த சாமர்த்தியமான செயலை பாராட்டி 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்னும் தேசிய விருது வழங்க மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவில் விருது பெற தேர்வானவர்களுக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருது
    தேசிய விருது
    தெற்கு ரயில்வே
    இந்தியா

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு

    தேசிய விருது

    நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள் பிறந்தநாள்
    ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    கமல்ஹாசனின் மகள்களை கடத்த திட்டமா? மகாநதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம் கமல்ஹாசன்
    தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம் பாலிவுட்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்

    இந்தியா

    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு மகாராஷ்டிரா
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  காங்கிரஸ்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025