Page Loader
கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 
சிபிஐ தனது அறிக்கையில், குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டதாகக் கூறியது

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2024
02:38 pm

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது. சிபிஐ தனது அறிக்கையில், குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டதாகக் கூறியது. அதோடு, மேற்கு வங்க காவல்துறை இது தற்கொலை என்று ஆரம்பத்தில் மருத்துவரின் பெற்றோரிடம் கூறி அவர்களை தவறாக வழிநடத்தியதாகவும், பின்னர் அவர்கள் இது ஒரு கொலை என்று மாற்றியதாகவும் கூறியது. மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தானாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கேஸ் டைரி

கேஸ் டைரி குறித்து புலனாய்வு அமைப்பிற்கு தெரிவிக்கப்படவில்லை 

குற்றம் சாட்டப்பட்டவரின் காயம் குறித்த மருத்துவ அறிக்கை குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டபோது, ​​மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அது கேஸ் டைரியில் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில், சிபிஐ விசாரணையில் 5வது நாளிலேயே நுழைந்துவிட்டதாகவும், அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டதாகவும், அப்படி ஒரு அறிக்கை இருப்பது புலனாய்வு அமைப்புக்கு தெரியாது என்றும் கூறினார்.