NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள் 
    சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது

    சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2024
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கருத்தரங்கு அறைக்கு அருகில் உள்ள அறையில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, குற்றம் நடந்த மார்பு மருத்துவ பிரிவில் சுவர்கள் இடிக்கப்பட்டது என்று கூறினார்.

    இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கொல்கத்தா காவல்துறையும் செய்யும் அக்கறையின்மை மற்றும் மூடிமறைக்கும் முயற்சி என்று அவர் குற்றம் சாட்டினார்.

    குற்றச்சாட்டுகள்

    இடதுசாரிக் குழுக்கள் ஆதாரங்களை சிதைப்பதாக குற்றம் சாட்டுகின்றன

    இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI) மற்றும் CPI(M) உடன் இணைந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) ஆகிய இரண்டும் மருத்துவமனையின் சீரமைப்புப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே இடதுசாரிகள் இணைந்த டாக்டர்கள் கூட்டு மன்றத்தின் உறுப்பினரான டாக்டர் சுபர்ணா கோஸ்வாமி, பயிற்சி மருத்துவரின் பலாத்காரத்தில் பல நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை பரிந்துரைத்தது என தெரிவித்தார்.

    மறுசீரமைப்பு பணிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்டவரின் உடல் கருத்தரங்கு அறையில் கண்டெடுக்கப்பட்டது.

    புதுப்பித்தல்

    மருத்துவமனை அதிகாரிகளின் நடவடிக்கைகள் கேள்விகளை எழுப்புகின்றன

    மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஓய்வறை கட்டுவதற்காக ஒரு அறையையும், அருகில் உள்ள பெண்கள் கழிப்பறையையும் இடித்து அகற்ற மருத்துவமனை அதிகாரிகள் உத்தரவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த பகுதிகள் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் இருந்தன.

    இந்த நடவடிக்கை அதிகாரிகளின் நோக்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது, பலர் ஆதாரங்களை சிதைக்கும் முயற்சி என சந்தேகிக்கின்றனர்.

    கைது

    குடிமை தன்னார்வ தொண்டர் கைது; வழக்கை சிபிஐ கைப்பற்றியது

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை குடிமைத் தன்னார்வ தொண்டரான சஞ்சோய் ராய் என்பவரை கைது செய்துள்ளது.

    இந்த வழக்கை கையாள்வதில் அதிருப்தி தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது, அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ஒப்படைக்க கொல்கத்தா காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்த ராய், குற்றம் நடந்த இடத்தில் தனது புளூடூத் ஹெட்ஃபோன்களை விட்டுச் சென்றார்.

    இதுவே அவரை குற்றவாளியாக கண்டுக்கொள்ள முக்கிய ஆதாரமாக இருந்தது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்பின்னர் எடுக்கப்பட்ட DNA சாட்சியங்களும் இவருடன் ஒத்துபோகவே இவரை குற்றவாளியாக கைது செய்தது காவல்த்துறை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    மருத்துவமனை
    மருத்துவக் கல்லூரி
    பலாத்காரம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்

    மருத்துவமனை

    நலமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியீடு சென்னை
    48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை சென்னை
    கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்  கேரளா
    தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு? தேமுதிக

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025