NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது
    அதிகாரிகளின் கூற்றுப்படி, காசிம் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2025
    10:19 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை கைது செய்தது.

    ராஜஸ்தானின் மேவத்தின் டீக் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட காசிம் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, காசிம் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

    ஒரு முறை ஆகஸ்ட் 2024 இல், அடுத்ததாக மீண்டும் மார்ச் 2025 இல், மொத்தம் சுமார் 90 நாட்கள் தங்கியிருந்தார்.

    இந்தப் பயணங்களின் போது, ​​அவர் ஐஎஸ்ஐ கையாளுபவர்கள் மற்றும் மூத்த செயல்பாட்டாளர்களிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார் எனக்கூறப்படுகிறது.

    சிம் கார்டு

    பாகிஸ்தானிற்கு இந்திய சிம் கார்டு பரிமாற்றம்

    விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.

    பின்னர் அதன் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் (PIOக்கள்) வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசு தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரித்தனர்.

    காசிம் இந்தியாவில் பல நபர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் அவருக்கு பரந்த வலையமைப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

    விரைவில் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவரது சகோதரரும் கூட ஒரு ஐஎஸ்ஐ முகவர் எனவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

    உளவு

    கடந்த ஆண்டு கிடைத்த உளவுத்தகவலின் படி கைது

    செப்டம்பர் 2024 இல் வெளிநாட்டு உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் இந்திய மொபைல் எண்களை சந்தேகத்திற்கிடமான முறையில் பயன்படுத்துவதாக அதிகாரிகளை எச்சரித்த ஒரு ரகசியத் தகவலுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.

    இந்த உளவு வளையத்தின் முழு அளவையும் அம்பலப்படுத்த தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

    கூடுதலாக, காசிமின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்த வலையமைப்பைக் கண்டுபிடிப்பது உளவுத்துறை நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    கைது
    ஐஎஸ்ஐ
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது ராஜஸ்தான்
    மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம் ரவீந்திர ஜடேஜா
    10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய் விஜய்

    ராஜஸ்தான்

    பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் இந்தியா
    ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை துப்பாக்கி சூடு
    ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை திமுக
    முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு  துப்பாக்கி சூடு

    கைது

    தமிழக ஆளுநர் RN ரவியிடம் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசியது என்ன? விஜய்
    சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்? சென்னை
    தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய வாரண்ட்  தென் கொரியா
    ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது சைபர் கிரைம்

    ஐஎஸ்ஐ

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ISI திட்டமா? சமயத்தில் முறியடித்த டெல்லி காவல்துறை கைது
    குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது  குஜராத்
    பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது ராஜஸ்தான்

    பாகிஸ்தான்

    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் ஜிடிபி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025