
இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை கைது செய்தது.
ராஜஸ்தானின் மேவத்தின் டீக் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட காசிம் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காசிம் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
ஒரு முறை ஆகஸ்ட் 2024 இல், அடுத்ததாக மீண்டும் மார்ச் 2025 இல், மொத்தம் சுமார் 90 நாட்கள் தங்கியிருந்தார்.
இந்தப் பயணங்களின் போது, அவர் ஐஎஸ்ஐ கையாளுபவர்கள் மற்றும் மூத்த செயல்பாட்டாளர்களிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார் எனக்கூறப்படுகிறது.
சிம் கார்டு
பாகிஸ்தானிற்கு இந்திய சிம் கார்டு பரிமாற்றம்
விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
பின்னர் அதன் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் (PIOக்கள்) வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசு தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரித்தனர்.
காசிம் இந்தியாவில் பல நபர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு பரந்த வலையமைப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
விரைவில் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவரது சகோதரரும் கூட ஒரு ஐஎஸ்ஐ முகவர் எனவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
உளவு
கடந்த ஆண்டு கிடைத்த உளவுத்தகவலின் படி கைது
செப்டம்பர் 2024 இல் வெளிநாட்டு உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் இந்திய மொபைல் எண்களை சந்தேகத்திற்கிடமான முறையில் பயன்படுத்துவதாக அதிகாரிகளை எச்சரித்த ஒரு ரகசியத் தகவலுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.
இந்த உளவு வளையத்தின் முழு அளவையும் அம்பலப்படுத்த தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
கூடுதலாக, காசிமின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்த வலையமைப்பைக் கண்டுபிடிப்பது உளவுத்துறை நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.